மொழிபெயர்

அலெக்ஸ்சாண்ட்ரைட்

அலெக்ஸ்சாண்ட்ரைட் (Alexandrite) அல்லது அலெக்சாண்ட்ரைட் என்பது BeAl2O4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்ட கிரிசோபெரில் (Chrysoberyl) என்ற பெரிலிய அலுமினியத்தின் ஒரு வகை கனிமம் ஆகும். பொன் வெள்ளைக் கல் என்ற பொருள் உள்ள கிரிசோபெரில் மூன்றுவித கற்களைக் கொண்டுள்ளது. மஞ்சள் முதல் பச்சை கிரிசோபெரில், வைடூரியம், அலெக்ஸ்சாண்ட்ரைட் என்பவை கிரிசோபெரில் கல்லின் 3 வகைகளாகும்.

அலெக்சாண்ட்ரைட்
நிற மாறுபாடு காட்டும் ஒரே அலெக்ஸ்சாண்ட்ரைட் கல்

அலெக்சாண்ட்ரைட் ஒளியின் தன்மைக்கேற்ப நிறம் மாறுபடும் தன்மை கொண்டது. இதனை அலெக்ஸ்சாண்ட்ரைட் தாக்கம் எனவும் குறிப்பிடுவதுண்டு. இதனால் பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக பெறப்படும் ஒளிக்கேற்ப மாறுபடும். அலெக்ஸ்சாண்ட்ரைட் நிற மாற்றமானது அதிலுள்ள பளிங்குக் கட்டமைப்பில் குரோமிய மின் அணுக்களால் சிறிதளவு அலுமினியம் மாற்றப்படுவதால் ஏற்படுகின்றது. பார்க்கக்கூடிய ஒளி நிறப்பிரிகையின் மஞ்சள் பகுதியில் (580 நானோ மீட்டர்) அலை நீளத்தின் ஒரு குறுகிய அளவுக்கு மேலாக ஒளி பலமாக உறிஞ்சப்படுவதால் அது சாத்தியமாகின்றது. மனிதப் பார்வை பச்சை ஒளிக்கு மிகவும் நன்றாகப் புலப்படுவதாலும் சிவப்பு ஒளிக்கு குறைவான புலப்படுவதாலும், அலெக்ஸ்சாண்ட்ரைட் பார்வைக்குரிய ஒளி முழு அளவில் உள்ள பகல் ஒளிக்கு பச்சையாகவும், பச்சையையும் நீல ஒளியையும் குறைவாக வெளிப்படுத்தும் வெண் சுடர் ஒளிக்கு சிவப்பாகவும் காட்சியளிக்கும்.


அலெக்ஸ்சாண்ட்ரைட் ரஸ்யாவின் உரால் மலைகளில் இருந்து கிடைப்பது பகல் வெளிச்சத்தில் பச்சையாகவும், செயற்கை வெளிச்சத்தில் சிவப்பாகவும் தெரியும். அலெக்ஸ்சாண்ட்ரைட்டின் ஏனைய வகைகள் பகல் ஒளியில் மஞ்சள் அல்லர் மென்சிவப்பாகவும், மின்னொளியில் ராஸ்பெரி சிவப்பாகவும் தென்படலாம். பரபரப்பான நிற மாற்றமும் திடமான நிற மாற்றமும் (சிவப்பிலிருந்து பச்சை) கொண்ட கற்கள் அரியவையாகும். ஆனால், குறைவான எளிய நிறம் கொண்ட (எ.கா: மஞ்சல் பச்சையிலிருந்து பழுப்பு மஞ்சள்) கற்கள் அலெக்ஸ்சாண்ட்ரைட் என்றே கருதப்படுகின்றன.

பரவலான கதையின்படி, பின்லாந்து இரத்தினக்கலியலாளரான நில்ஸ் கஸ்டவ் நோர்டென்ஸ்கியோல்ட் என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. ரசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் மன்னரின் பெயரைக் கொண்டு இக்கல்லுக்கு பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் நோர்டென்ஸ்கியோல்ட் புதிதாகக் கிடைத்த இக்கல்லை மரகதம் எனவே அடையாளம் கண்டார்.

அலெக்ஸ்சாண்ட்ரைட் 5 கரட் (1,000 மி.கி) மற்றும் அதைவிடப் பெரிய கற்கள் பாரம்பரியமாக உரால் மலைகளில் கிடைத்தன். ஆனால் பெரிய கற்கள் பிரேசிலில் கிடைக்க ஆரம்பித்தன. இதைத்தவிர இந்தியா (ஆந்திரா), மடகஸ்கார், தன்சானியா, இலங்கை ஆகிய இடங்களிலும் இரத்தினக்கல் பத்தல்கள் உள்ளன.

இன்று சில ஆய்வுகூடங்களில் செயற்கைமுறை அலெக்ஸ்சாண்ட்ரைட் கற்கள் இயற்கை போன்றே பௌதீக தன்மையுடனும் வேதியல் தன்மையுடனும் உருவாக்கப்படுகின்றன. பாய்ம-வளர்ச்சி அலெக்ஸ்சாண்ட்ரைட் மற்றும் சொக்ரால்ஸ்கி முறை (இலுவை) அலெக்ஸ்சாண்ட்ரைட் முறைகள் செயற்கையாகப் பயன்படுத்தப்படுகின்றது. பாய்ம-வளர்ச்சி முறையில் செய்யப்படும் கற்களை இயற்கையான கற்களில் இருந்து வேறுபடுத்திக் காண்பது மிகவும் கடினமானது. அவற்றில் இயற்கை அலெக்ஸ்சாண்ட்ரைட் போன்றே குறைபாடுகள் (குமிழி, கோடுகள், ஒழுங்கின்மை) காணப்படும். சொக்ரால்ஸ்கி முறையில் செய்யப்படும் கற்கள் மிகவும் தூய்மையாகவும், உருப்பெருக்கியில் பார்க்கும்போது வளைந்த வரிப்பள்ளங்களைக் கொண்டு காணப்படுவதால் எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். மேலும் இது நீலத்தில் இருந்து சிவப்பு நிற மாற்றத்திற்கு உள்ளாகும். இந்நிற மாற்றம் இயற்கையான கற்களில் ஏற்படுவதில்லை. வெப்பநீராற்றல் முறையில் உருவாக்கப்படும் கற்கள் உண்மையான அலெக்ஸ்சாண்ட்ரைட்டை ஒத்தே காணப்படும்.

சில இரத்தினக்கற்கள் பிழையாக ஆய்வுகூடங்களில் உருவாக்கப்பட்ட செயற்கை அலெக்ஸ்சாண்ட்ரைட் என கருதப்பட்டாலும், அவை குருந்த இழை வார் தடமுள்ள மூலக்கூறுகளைக் கொண்ட (எ.கா: வனேடியம்) அல்லது நிறம் மாறும் சிபினல் கற்களாகும். ஆனாலும், அவை கிரிசோபெரில் கனிமம் அல்ல. இவை செயற்கைமுறை அலெக்ஸ்சாண்ட்ரைட்டைவிட “போலி அலெக்ஸ்சாண்ட்ரைட்” என விபரிக்கப்படுகின்றது. அலெக்ஸ்சாண்ட்ரைட் போன்ற சபையர் கற்கள் (sapphire) சுமார் 100 வருடங்களாக உள்ளதுடன், ஊதாவிலிருந்து வெளிர் ஊதா நிறமாற்றத்தை வெளிப்படுத்தும். ஆனாலும் அவை ஒருபோதும் பச்சை நிறத்தை வெளிப்படுத்தாததால் உண்மையான அலெக்ஸ்சாண்ட்ரைட் போன்று தோற்றமளிப்பதில்லை.

தமிழ் இலக்கணமும் பெரியாரும்

ஈ. வெ. இராமசாமி என்ற இயற்பெயருடைய பெரியார் ஒரு திராவிட சமூக சீர்திருத்தவாதியும் இந்தியா அரசியல்வாதியும் ஆவார். இவர் சுயமரியாதை இயக்கம்,  திராவிடர் கழகம் என்பவற்றின் உருவாக்குனரும் ஆவார். பெரியார் தமிழின் நன்மைக்காகவும் தமிழர் உயர்ச்சிக்காகவும் பரிந்துபேசி முக்கிய இடம் பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கணமும் பெரியாரும்

இந்தித் திணிப்பு இந்தியத் துணைக்கண்டத்திலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்டபோது, பெரியார் “ஒருவரின் மொழி மீதான அன்பு எங்கள் தாயகத்தில் பிறந்த மக்களுக்குத் தேவையான எல்லா அன்புக்கும் முதன்மையானது. தன் மொழியை அன்பு செய்யாதவன் தன் தாய்நாட்டையும் அன்பு செய்யமாட்டான். ஒரு தேசம் ஒருவனின் மொழியின் மீதான அன்பின் அடிப்படையில் செயற்படுகிறது. என்னுடைய மன்றாடல் என்னவென்றால், தமிழர் தங்கள் தாய்மொழி மீதான அன்பை அதிகரிக்க வேண்டும். நான் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவது என்னவென்றால் தாய்மொழியில் பற்றுதல் தமிழ்நாட்டில் பிறந்தவருக்குக் கட்டாயம். வங்காளிகள் வங்க மொழியை அன்பு செய்கிறார்கள். மராத்தியர் மராத்திய மொழியை அன்பு செய்கின்றனர். ஆந்திராக்காரர்கள் தெலுங்கை அன்பு செய்கின்றனர். ஆனால் தமிழர் தமிழ் மொழியை அன்பு செய்வதில்லை. தங்கள் தாய்மொழியை பயன்படுத்த அன்பு செய்யாதவரை தமிழர் முன்னேறப் போவதில்லை. நான் தமிழை அன்பு செய்வது சதாரணமானதல்ல. ஏனென்றால், அது தாய்மொழி அல்லது தமிழ்நாட்டு அரசின் மொழி என்பதாலாகும். எனக்கு தமிழுடன் உள்ள தொடர்பு அதனுடைய தனித்தன்மை அல்லது அதன் பழமையினால் ஏற்றபட்டதல்ல. நான் தமிழை அன்பு செய்வது, நான் அதனூடாக எதிர்பார்க்கும் அனுகூலத்தையும் அது இல்லாதவிடத்து ஏற்படும் இழப்பின் அளவையும் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுள்ளேன்”.

தமிழ் மொழி விமர்சனம்


பெரியார் தமிழ் மொழி மீதும் ஏனைய திராவிட மொழிகள் மீதும் புகழ்ச்சியையும் விமர்சனத்தையும் முன்வைத்தார். இவர் இது பற்றித் தெரிவிக்கையில், “எமது நாட்டில் வேறொரு மொழியைத் திணிப்பதனால் வரும் பிரதிகூலம் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுள்ளேன். நான் இதனை பொறுத்துக் கொள்ளாவில்லை, மாறாக எதிர்க்கிறேன். அது புதியது என்பதாலோ அல்லது இன்னுமொரு நிலத்திற்குச் சொந்தமானது என்தாலே, அதை எதிர்க்கவில்லை. என் கருத்தின்படி, தமிழ் மொழி எல்லாக் களங்களிலும் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய தகுதியைக் கொண்டிருக்கிறது. அது மேன்மையான வாழ்விற்கும் அடிப்படைக்கும் வழிகாட்டும். ஆனாலும், ‘தமிழில் எல்லா ஆதாரங்களும் உள்ளனவா’ என்று மக்கள் கேட்கலாம். இந்தத் தகைமைகள் இல்லாதிருந்தாலும், தமிழ் கலை, பழக்கவழக்கம், பண்பாடு, இந்தியாவில் உளள் பல மற்றைய மொழிகளைவிட பெரும் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய தகுதியான சொற்களஞ்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆகவே, மற்றைய மொழிகள் தமிழுக்கு அனுகூலமில்லாத தன்மையை ஏற்படுத்தக்கூடிய நிலை வரவேற்கத்தக்கதல்ல”.

பெரியார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பன ஒரே மொழியில் அல்லது பழைய தமிழின் ஒரே தாய் மொழியில் இருந்தது என வலியுறுத்தினார். அவர் இது பற்றி விளக்கும்போது தமிழ் மொழி நான்கு வேறுபட்ட திராவிட மாநிலங்களில் பேசப்பட்டு, வேறு பெயர்களால் அழைக்கப்படது. ஆகவே இதற்கு வெவ்வேறு பெயர்கள் உருவாகின. இது பற்றி அவர் எழுதும்போது, கலையில் தமிழ் எழுத்துக்களின் பாவனை அனுகூலமான அறிவுக்கும், திறமைக்கும், உற்சாகத்திற்கும் ஊக்குவிப்பும் அவர்கள் வாழ்வியலில் மக்களுக்குப் பயனுள்ளதும், மக்களிடையே அவற்றை பிரச்சாரம் செய்யவும், அதன் மூலம் மக்களை அறிவடையச் செய்யும். மேலும் இது பற்றி அவர் குறிப்பிடுகையில், இது மொழியை செழிப்படையச் செய்து, தமிழுக்கான முத்திரையாக விளங்கும். பெரியார் தமிழ் மொழி திராவிட மக்களை தமிழ் கலாச்சாரச் கொடியின் கீழ் ஒன்றுபடச் செய்யும் என்றும், கன்னடர், தெலுங்கர், மலையாளிகளை விழிப்படையச் செய்யும் எனவும் நம்பினார். பொது குடை மொழியின் கீழ் திராவிடர் அணிசேர்தல் பற்றிக் குறிப்பிட்ட பெரியார், “ஒன்றுபடலுக்கான ஒரு நேரம் வரும். இது தென்னிந்திய அதிக்கம் முடிவுறும் வரை தொடரும். எங்களிடையே ஒரு சுதந்திர இறைமையான நாட்டை மீளக் கொண்டுவருவோம்” என்றார்.

பெரியார் தமிழ் மொழி பற்றியும் தமிழர் பற்றியும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தமிழ் மக்களை “காட்டுமிராண்டிகள்” எனவும், தமிழ் மொழியை “காட்டுமிராண்டிகளின் மொழி” எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் இது பற்றி விளக்கமளித்த அனிட்டா டிகிள் என்பவர், பெண் பற்றிய வாய்மூல அமைப்பைக் கொண்டிராததால் பெரியார் அவ்வாறு குறிப்பிட்டார் என்றார்.

தமிழ் அரிச்சுவடி சீர்திருத்தம்

தமிழ் அரிச்சுவடியில் சீர்திருத்தம் வேண்டும் என்ற எண்ணத்தை பெரியார் கொண்டிருந்தார். சில காரணங்களால் அவ்வாறு கருதினார். 'இ' எழுத்தின் குறுகிய வடிவத்தை சுருக்கி பிரதிநிதித்துவப்படுத்துவதும், தொடராக் கொண்ட 'ஈ' எழுத்து. 400 அல்லது 500 வருடங்களுக்கு முந்திய கல்வெட்டுக்களில் தமிழ் எழுத்தக்கள் வேறு வடிவில் உள்ளன. தேவை, அச்சிடல் தொழிநுட்பத்துடன் இசைவுபடும் அனுகூலத்தின் அடிப்படையில், பெரியார் சில எழுத்துக்களை மாற்றுதல், எழுத்துகளை குறைத்தல், சில குறியீடுகளை மாற்றுதல் உணர்வு பூர்வமானதெனக் கண்டார். இது பற்றி மேலும் விளக்கிய அவர், பழமையான மிகவும் சிறந்த மொழி மற்றும் அதன் எழுத்துக்கள் சீர்சிருத்தத்திற்கு உள்ளாக வேண்டும் என்றார். ஏனென்றால், தற்கால போக்குவரத்து, பன்னாட்டுத் தொடர்பு ஆகியன பல சொற்களையும் உற்பத்திகளையும் பல நாடுகளில் இருந்து கொண்டு வருதல், வெளிச் சொற்கள், அவற்றின் உச்சரிப்புக்கள் தமிழுக்கு மிகவும் விரைவாக உட்கொணரல் ஆகிய காரணங்களால் மாற்றம் தேவையானது என்றார். ' கா ', ' கே ' போன்ற எழுத்துக்களில் மேலதிகமாக, தனித்த குறியீடுகள் (அரவு, இரட்டைக் கொம்பு) காணப்படுகின்றன. ' கி ', ' கீ ', 'கு ', ' கூ ' ஆகிய குறிகள் இணைந்த எழுத்துக்களில் ஏன் அவ்வாறு இல்லை என வாதிட்டார். பெரியாரின் கருத்துப்படி, எழுத்தின் வடிவை மாற்றுதல், புதிய குறியீட்டை உருவாக்கல், புது எழுத்துக்களை இணைத்தல், ஒற்றுமைத்தன்மை, தேவைக்கு அதிகமானவற்றைக் கைவிடல் ஆகியன முற்றிலும் தேவையானது. இது மொழிக்கும் அதன் எழுத்துமுறைக்கும் புகழுக்கும் சிறப்புக்கும், அவை இலகுவாக விளங்கிக் கொள்ளவதில் அல்லது கற்றுக் கொள்ளலில் தங்கியுள்ளது என பெரியார் குறிப்பிட்டார்

ஒன்பது வளைவுகள் பாலம்

ஒன்பது வளைவுகள் பாலம் (Nine Arches Bridge) என்பது இலங்கையிலுள்ள ஒரு பாலம் ஆகும். இது ‘வானத்தில் பாலம்’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பிரித்தானியப் பேரரசு இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் பிரித்தானிய இரயில்வேயின் கட்டுமானங்களில் சிறப்பு எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. பிரித்தானிய பொறியியலார்களுடன் இலங்கையரான அப்புகாமியும் இணைந்து இதனைக் கட்டினார். இத்திட்டத்தின் பிரதான பொறியியலாளராக விமலசுந்தர என்பவரும், வடிவமைப்பாளராக ஹரல்ட் குத்பேர்ட் மார்வூட் என்பவரும் காணப்பட்டனர். இத்திட்டம் பற்றிய திட்டம், வரைவு உட்பட்ட சகல ஆவணங்களும் சிலோன் பொறியாலாளர் சங்கம் 1923 இல் வெளியிட்ட “சிலோனில் சீமெந்து தொடரூந்துப் பள்ளத்தாக்கு கடவைப் பாதை கட்டுமானம்” என்ற அறிக்கையில் காணலாம்.

ஒன்பது வளைவுகள் பாலம்
ஒன்பது வளைவுகள் பாலம்

கட்டுமானப் பொருள் கல், செங்கல், சீமெந்து
நீளம் 300 அடி
அகலம் 25 அடி
உயரம் 80 அடி
தூண்கள் 9
கட்டுமான நிறைவு 1921
புவியில் அமைவு 6.876709°N 81.061622°E

ஒன்பது வளைவுகள் பாலம் பதுளை மாவட்டத்திலுள்ள தெமோதரை என்ற இடத்தில் எல்ல என்ற இடத்திற்கும் தெமோதரை தொடரூந்து நிலையத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியின் சுற்றுவட்டாரம் பாலத்தின் கட்டுமான புதுமை, பக்கத்து மலைக் குன்று இருக்கும் பசுமை என்பவற்றால் உல்லாசப் பயணிகளைக் கவருமிடமாக உள்ளது.


பாலத்திற்கான கட்டட வேலை நடந்து ஆரம்பிக்கப்பட்டபோது, முதலாம் உலகப்போர் நடைபெற்றது. இதனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இரும்பு பிரித்தானியாவின் சண்டை முனைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது என்ற பொதுவான கருத்து உள்ளது. இதன் காரணமாக, வேலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், இரும்பு இல்லாமல் கல், செங்கல், சீமெந்து ஆகியவற்றைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது என்ற சொல்லப்படுகின்றது. இலங்கை தொடரூந்துயில் இது ஒரு முக்கிய உருவமாக இருப்பதால், இந்தப் பாலத்தினூடே தொடரூந்து வரும் அழகிய காட்சிகள் இன்றும் இலங்கை தொடரூந்து நிலையங்களிலும், விளம்பரப் பலகைகளிலும் காணலாம்.

வீனசின் பட்டி

வீனசின் பட்டி (Belt of Venus) அல்லது வினசின் ஒட்டியாணம் அல்லது மெல்லொளி எதிர் வளைவு என்பது விடியலுக்கு சற்று முன்னர் அல்லது பொழுது புலர்தலுக்குப் பின் தெரியும் ஓர் ஒளியியல் தோற்றப்பாடு ஆகும். மெல்லொளியின்போது மென்சிவப்பு ஒளி சுமார் 10–20° மேலாக அடிவானத்தில் தெரியும்.

வீனசின் பட்டி
விமானத்திலிருந்து பார்க்கும்போது தெரியும் வீனசின் பட்டி

வீனசின் பட்டி மெல்லொளியின்போது அடிவானத்தில், எதிர் சூரியப் புள்ளிக்குக் கிட்டத் தெரியும் செவ்வொளியாகும். செவ்வொளி போன்று, செந்நிற சூரிய ஒளியின் கதிர் எதிரொளிப்பும் வீனசின் பட்டியைத் தோற்றுவிக்கும். செவ்வொளி போலல்லாது, சூரிய வெளிச்சத்தின் ஒளி முறிவானது சூரிய மறைவின் பின் அல்லது சூரிய உதயத்திற்கு முன் தொடர்ந்திருத்தல், வளிமண்டலத்தில் பட்டியைச் சுற்றி மென்சிவப்பு வளைவையும் உருவாக்குதல் என்பன மெல்லிய துணிக்கைகள் மூலம் ஏற்படுகின்றது.


மெல்லொளியின்போது, பூமி நிழலின் கருமையான பட்டியினால் அடிவானத்திலிருந்து ஒளி வேறுபடுத்தப்படுகின்றது. வளைவின் மென்சிவப்பு நிறம் சூரியன் உதயம் அல்லது மறைவிலிருந்து வரும் செவ்வொளியின் ஒளிப் பிரதிபலிப்பினால் ஏற்படுகின்றது. இதுபோன்ற தாக்கம் முழு நிலவு மறைப்பின்போதும் ஏற்படுகின்றது. மேலும், இராசி மண்டல ஒளியும் இதுபோன்ற ஒரு தோற்றப்பாட்டால் ஏற்படுகின்றது. இது சூரியக் குடும்பத்திலுள்ள கிரக தூசியிலிருந்து வரும் சூரிய ஒளிச் சிதறல் பிரதிபலிப்பால் ஏற்படுகின்றது.

இந்த தோற்றப்பாட்டின் பெயரான “வீனசின் பட்டி” என்பது பண்டைய கிரேக்ககப் பெண் கடவுளான அப்ரோடிட்டின் ஒட்டியாணம் அல்லது மார்புப் பட்டியின் தோற்ற உவமானம் மூலம் பெறப்பட்டது. உரோமத் தேவைதையான வீனஸ் அப்ரோடிட் தேவதைக்கு நிகராகக் கருதப்படுகிறது. வீனசின் பட்டியில் வெள்ளிக் கோள் (வீனஸ்) தென்படுவது குறிப்பிடத்தக்கது.

நீலகிரித் தேயிலை

நீலகிரித் தேயிலை (Nilgiri tea) பொதுவாக ஒரு கருமையான, கடுமைமிக்க நறுமணமுள்ள, வாசனைமிக்க தேநீர் எனக் கூறப்படுகிறது. இது தென் இந்திய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மலைகளின் தென் பகுதியில் வளர்கிறது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்றுகளில் இது வளர்ந்தாலும், பிற தேயிலை வகைகளும் அம்மாவட்டத்தில் வளர்கின்றன. இது உற்பத்தி அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தின் இந்திய அரசாங்கத்தின் புவியியல் சார்ந்த குறியீடு பாதுகாப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரித் தேயிலை
நீலகிரித் தேயிலை

வகை கருப்பு
வேறு பெயர் நீல மலைத் தேயிலை
இடம் தமிழ்நாடு, கேரளா
விபரம் கருமையும் நறுமணமும்

நீலகிரித் தேயிலைத் தோட்டங்கள் நீலகிரித் தோட்டச் சங்கம் பிரிதிநித்துவம் செய்கிறது. ஆயினும் நீலகிரி மாவட்ட 30 வீத தேயிலை உற்பத்தியை மட்டும் செய்கிறது. பரந்தளவிலான உற்பத்தி ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்டுள்ள சிறு உற்பத்தியாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.


நீலகிரி மாவட்ட (மற்றைய மாவட்டங்களும்) தேயிலைத் தோட்டங்கள் உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமாகவும், சொந்த செயல்முறை தொழிற்சாலைகளில் ஊடாக இயக்கப்படுகின்றன. சிறு உற்பத்தியாளர்கள் தங்கள் தேயிலையை பச்சை இலைகளாக ‘இலை வாங்கும் தொழிற்சாலைகள்’ கொள்வனவிற்காக விற்கின்றனர். செயல்முறையின் பின் குன்னூர், கோயம்புத்தூர், கொச்சின் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் ஏல விற்பனையூடாக பல விற்பனை செய்யப்படுகின்றன. 50% இற்கும் அதிகமான நீலகிரித் தேயிலை தேயிலைப் பைகளாக பயன்படுத்துவதற்கேற்ப ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி செய்யப்படும் நீலகிரித் தேயிலை தொடர்பான மிகச் சரியான தரவு நம்பகத்தன்மையற்றுள்ளது. ஆயினும் 70% தென் இந்திய தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும், இதில் நீலகிரி தென்னிந்திய உற்பத்தியில் அரைவாசிக்கு மேல் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விலையுயர்ந்த கையால் தரப்படுத்தப்பட்ட, செம்மஞ்சள் உயர்தர கருநிறத் தேயிலை (O.P.)  போன்ற முழு இலையுடனான வகைத் தேயிலை பன்னாட்டு ஏலத்தில் பின் அதிக விலையில் விற்கப்படுகின்றன. இவற்றை உள்ளூர் நுகர்வாளர்களால் கொள்ளவனவு செய்ய முடிவதில்லை. ஏப்ரல் 2006 இல் நீலகிரித் தேயிலை “உயர் பெருமதிப்புக்கள்” பெற்று ஒரு கிலோவிற்கு 600 டொலர் என்ற உலக சாதனையைச் செய்தது. லாஸ் வெகாஸில் நடந்த ஏலத்தில் இதுவே முதல் முறையாக சாதனையாகக் காணப்பட்டது. இயந்திர தரபப்டுத்தப்பட்ட, குறைந்த செலவு உயர் ரக தேயிலை அரை-முழு இலை வகைத் தேயிலையாக உடைந்த செம்மஞ்சள் உயர்தர கருநிறத் தேயிலை (BOP)  என அறியப்படுகிறது. ஆனாலும், பல உற்பத்தி நொறுக்குதல், கிழித்தல், சுருட்டுதல் உற்பத்தி வழிமுறை மூலம் நடைபெறுகின்றன. இது அதிக எண்ணிக்கையான குவளை அளவினை வெளியிடுகிறது. கடுமையான வாசனை நீலகிரித் தேயிலை கலப்பு நோக்கத்திற்குப் பயன்படுகிறது. அதேநேரம், நீலகிரித் தேயிலை முன்னைய சோவியத் ஒன்றிய விற்பனையில் இதன் முன்னைய நம்பகத்தன்மையில் குறைவான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி பின்னடைவுக்குள்ளானது. சோவியத் கொள்வனவாளர்கள் இதன் தரம் தொடர்பில் சிறியளவு கருத்தினையே கொண்டிருந்தனர். 1990 களில் ஏற்பட்ட வர்த்தகப் பங்காளி வீழ்ச்சி நீலகிரி மாவட்டத்தில் உறுதியான பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தியது. கடந்த காலத்தில், இந்திய தேயிலைச் சபை நீலகிரித் சில தேயிலை உற்பத்தியாளர்களிடம் அவர்களின் உற்பத்தி தரக்குறைவுக்காக வரி விதித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவுகள் என்பது இராணுவ, புலனாய்வு, வெளிநாட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் (த.வி.பு) பிரிவுகளைக் குறிக்கும். நான்காம் ஈழப்போரின்போது இவற்றில் பல அழிக்கப்பட்டுவிட்டன. புலனாய்வு, நிதி பிரிவுகளில் சில வெளிநாடுகளில் எஞ்சியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவுகள்

இராணுவப் பிரிவு / தரைப்படைகள்

சார்ல்ஸ் அன்ரனி படையணி 

சார்ல்ஸ் அன்ரனி படையணி 10 ஏப்ரல் 1991 அன்று த.வி.புலிகளினால் முதலாவது சிறப்பு மரபுவழிச் சண்டை படையணியாக உருவாக்கப்பட்டது. இது தொடர்ந்து பிரதான சண்டைப் பிரிவாக விடுதலைப் புலிகளில் இருந்து, பிரதான சண்டைகளான ஜெயசிக்குறு நடவடிக்கை, 1996 முல்லைத்தீவுச் சமர், கிளிநொச்சிப் போர் (2008-2009), ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் (2000), ஓயாத அலைகள் நடவடிக்கை 1, 2, 3, 4 ஆகியவற்றில் பங்கு பற்றியது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வலது கரமாக விளங்கிய சீலன் எனப்பட்ட சார்ல்ஸ் லூக்காஸ் அன்ரனி என்பவரின் பெயர் இப்படையணிக்கு இடப்பட்டது. பால்ராஜ், அமுதாப், கோபித் போன்றோர் இப்படையணிக்குத் தலைமை தாங்கிய தளபதிகள் ஆவர். ஈழப்போரின் கடைசி நாட்களில் இப்படையணி முற்றாக அழிக்கப்பட்டது.

ஜெயந்தன் படையணி 



ஜெயந்தன் படையணி கிழக்கு மாகாண போராளிகளைக் கொண்டு காணப்பட்டது. சிறப்பு மரபுவழிச் சண்டைப் படையணியான இது பல சண்டைகளில், குறிப்பாக தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை (1993), ஜெயசிக்குறு நடவடிக்கை, 1996 முல்லைத்தீவுச் சமர், கிளிநொச்சிப் போர் (2008-2009), ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் (2000) ஆகியவற்றில் பங்கு பற்றியது. இப்படையணி ஜெயந்தன் என்ற போராளியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இதற்குத் தலைமை தாங்கிய கீர்த்தியும், இணைத் தலைமை தாங்கிய நகேசும் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட்டனர். 

கரும்புலிகள் 

கரும்புலிகள் தற்கொலைத் தாக்குதலை நாட்டின் பல பகுதிகளில் நடத்திய விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்பு படைப்பிரிவாகும். படையணிகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட போராளிகளைக் கொண்டு இது அமைக்கப்பட்டது. இது யாழ்ப்பாணம் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் மீது, வெடிமருந்து நிரப்பப்பட்ட பாரவூர்தியை ஓட்டிச் சென்று, கப்டன் மில்லர் என்ற வல்லிபுரம் வசந்தன் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 5 யூலை 1987 இல் உருவாக்கப்பட்டது. இத்தாக்குதலில் கப்டன் மில்லரும் 128 படையினரும் இறந்தனர். இதுவே கரும்புலி ஒன்று தன்னைத்தானே வெடிக்க வைத்த முதலாவது சம்பவமாகும். விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் என்ற சண்முகலிங்கம் சிவசங்கர் இப்பிரிவை வழிநடத்தினார். விடுதலைப் புலிகளின் கூற்றின்படி, 5 யூலை 1987 முதல் 20 நவம்பர் 2008 வரை 378 கரும்புலிகள் (274 ஆண்களும் 104 பெண்களும்) தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கரும்புலிகள் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பல்வேறுதரப்பட்ட உயர் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று உலகத் தலைவர்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய ஒரே கிளர்ச்சிக் குழு இதுவாகும். முன்னைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 21 மே 1991 அன்று படுகொலை செய்யப்ட்டது, முன்னைய இலங்கை சனாதிபதி ரணசிங்க பிரேமதாசா 1 மே 1993 இல் படுகொலை செய்யப்ட்டது, முன்னைய இலங்கை சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது 18 டிசம்பர் 1999 அன்று தோல்வியில் முடிந்த, அவர் வலது கண்ணை இழந்த படுகொலைத் தாக்குதல் முயற்சி என்பன இத்தாக்குதல்களாகும்.

மரணமடைந்த கரும்புலிகள் மிகவும் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் குடும்பத்தினர் “மகா வீரர் குடும்பம்” என்று கௌரவிக்கப்பட்டனர். வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அவ்வீரர்கள் இறுதி இரவுணவு உட்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டனர். இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வழங்கப்படும் அரிதான கௌரவிப்பாகும்.

சிறுத்தைப் படையணி 

சிறுத்தைப் படையணி சிறப்பு தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கப்பட்டது. தற்காப்புப் பயிற்சி உட்பட பல சிறப்புப் பயிற்சிகள் பெற்ற அணியாக இது காணப்பட்டது.

ஈரூடக தாக்குதல் படையணி

ஈரூடக தாக்குதல் படையணி நீர் நிலையிலும் தரையிலும் தாக்குதல் நடத்ததுவதற்காக உருவாக்கப்பட்டது.

கடற்புலிகள்

கடற்புலிகள் 1984 இல் உருவாக்கப்பட்ட, விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவாகும். கடற்புலிகள் சிறிதளவான ஆனால் திறமையான தற்கொலைக் குண்டு கலங்களைக் கொண்டிருந்தனர். இது இலங்கைக் கடற்படையின் 29 சிறிய கரைக் கண்காணிப்பு படகுகளையும் ஒரு சரக்குக் கப்பலையும் மூழ்கடித்தனர். பிரதான முகாமை முல்லைத்தீவில் கொண்டிருந்த இதனை சூசை வழிநடத்தினார். 2008 இறுதிக்குப் பின்னரான காலப்பகுதியில் கடற்புலிகளின் சண்டையிடும் திறன், இலங்கை இராணுவம் கடற்புலிகளின் பல முகாம்களை கைப்பற்றியதாலும் இலங்கைக் கடற்படை வட கடலில் கடுமையாக காவலில் ஈடுபட்டதாலும் குறைவடையத் தொடங்கியது.

இப்படையணியில் அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு, சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி, நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு, கடற்படை படகு கட்டுமான பிரிவு, கடற்கரும்புலிகள் அணி, கடற்சிறுத்தை சிறப்பு படையணி, சார்லஸ் சிறப்பு அணி, சங்கர் படையணி, வசந்தன் படையணி, சேரன் படையணி, பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி, கடல் வேவு அணி ஆகிய பிரிவுகள் காணப்பட்டன.

வான் புலிகள்


வான் புலிகள் விடுதலைப் புலிகளின் வான் படைப்பிரிவு ஆகும். விடுதலைப் புலிகளே உலகில் வானூர்திகளைக் கொண்டிருந்த ஒரே ஒரு இராணுவ இயக்கமாகும். இதன் இருப்பு பற்றி பல ஆண்டுகளாக ஊகிக்கப்பட்டது. ஆனால் மார்ச் 2007 இல் முதலாவது தாக்குதலை மூலம் இதன் இருப்பு வெளிப்பட்டது. வான் புலிகளின் உருவாக்கத்திற்கு காரண கர்த்தவாக கேணல் சங்கர் எனப்பட்ட வைத்தியலிங்கம் சொர்ணலிங்கத்தை விடுதலைப் புலிகள் குறிப்பிட்டனர். 27-28 நவம்பர் 1998 அன்று தமிழ்நெட், புலிகளின் குரல் வானொலி நிலையம் வருடாந்த மாவீரர் நிகழ்வின்போது “முல்லியாவளை மாவீரர் தின நிகழ்வின்போது விடுதலைப் புலிகளின் பிரிவான வான் புலிகளின் வானூர்தி பூத் தூவியது” எனக் குறிப்பிட்டதாக அறிக்கையிட்டது. இதனை இலங்கை வான்படை உறுதி செய்யாவிட்டாலும், சில அறிக்கைகள் முல்லைத்தீவு வானில் அடையாளந் தெரியாத வானூர்தி தென்பட்டதாக தெரிவித்தன. 11 ஆகஸ்ட் 2006 இல் யாழ்ப்பாண அடையாளமற்ற மூலங்களை மேற்கோள் காட்டிய தமிழ்நெட் “குறைந்தது ஒரு அடையாளந் தெரியாத வானூர்தி பலாலி இலங்கை இராணுவ முகாம் மேலாப் பறந்து படையினர் மீது ஏவுகணை தாக்குதல்” நடத்தியது எனக் குறிப்பிட்டது. ஆயினும், இந்த வானுர்திகள் முதன் முறையாக கட்டுநாயக்கா வான் படைத்தளம் மீது மார்ச் 2007 இல் தாக்குதல் நடத்தியபோது அடையாளம் காணப்பட்டன. அத்தாக்குதலுக்கு இரண்டு சிலின் இசட் 143 இலகு வானுர்திகள் பயன்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 8 மேலதிக தாக்குதல்கள் இராணுவ இலக்குகளின் மீது நடத்தப்பட்டன. இறுதியாக, பெப்ருவரி 2009 இல் கொழும்பிலுள்ள இலங்கை வான் படைத்தளத்தை இலக்கு வைத்து வான் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. வடக்கு தாக்குதலின்போது இலங்கை படைத்துறை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வானூர்தி ஓடுபாதைகளைக் கைப்பற்றியது.

இம்ரான் பாண்டியன் படையணி 

இம்ரான் பாண்டியன் படையணி வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. அமுதன், கடாபி ஆகியோர் இதன் தலைவர்களாவர். மெய்ப்பாதுகாவலர்களைக் கொண்ட அணியினர் மே 2009 இல் கொல்லப்பட்டனர்.

ராதா வான் காப்புப் படையணி / ராதா விமான எதிர்ப்புப் படையணி

ராதா படையணி வான் காப்பிற்காகவும், விடுதலைப் புலிகளுக்குள் உளவு பார்ப்பதற்காகவும்,  பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும்  நியமிக்கப்பட்டது. 2004 இல் உருவாக்கப்பட்ட இப்படையணி புதிய பிரிவாகவே காணப்பட்டது. இதன் கட்டளைத் தளபதி சிலம்பரசன் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட, துணைத் தலைவர் அன்பு பிடிபட்டார். 

கிட்டு பீரங்கிப் படையணி

கிட்டு பீரங்கிப் படையணி விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியாகும். இதற்குத் தலைதாங்கிய மணிவண்ணன் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட்டார். இப்பிரிவின் கீழ் இருந்த முக்கிய ஆயுதங்கள் பின்வருமாறு:

கீர்த்தி சிறி சிறு பீரங்கிப் படையணி / குட்டிச்சிறி மோட்டார் படையணி

விடுதலைப் புலிகளின் சிறு பீரங்கிப் படையணியாக கீர்த்தி சிறி சிறு பீரங்கிப் படையணி செயற்பட்டது. இது 500 இற்கு மேற்பட்ட 82/81 மிமீ சிறு பீரங்கிகளையும், 150 இற்கு மேற்பட்ட 150 மிமீ சிறு பீரங்கிகளையும், நான்கு 140 மிமீ சிறு பீரங்கிகளையும் கொண்டிருந்தது. இப்படையணியின் கட்டளைத் தளபதி கோபால் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட்டார். 

விக்டர் கவச வாகன எதிர்ப்பு மற்றும் கவச வாகனப் படையணி

விக்டர் கவச வாகன எதிர்ப்புப் படையணி 1995 இல் உருவாக்கப்பட்டது. இது கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், கவச வாகனங்களைக் கொண்ட அணியாகவும் செயற்பட்டது. இதனிடம் 350 இற்கும் மேறபட்ட ஆர்.பீ.ஜி-7 ஆயுதங்கள் காணப்பட்டன. இப்படையணியில் 2001 இல் இலங்கை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரீ-55 பிரதான போர்க் கவச வாகனமம் உட்பட சில கவச வாகனங்களைக் கொண்டு காணப்பட்டது. இதனை இலங்கை இராணுவம் மீளவும் 2009 இல் புதுமாத்தளனில் இருந்து கைப்பற்றியது. 

அன்பரசி படையணி

அன்பரசி படையணி விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையணியாகச் செயற்பட்டது. இது நான்கு வெற்றிகரமான நில-வான் ஏவுகணைத் தாக்குதல்களை இலங்கை விமானப்படைக்கு எதிராகச் செயற்படுத்தியது. இதன் தாக்குதலில் இரு அவ்ரோ வானூர்திகள் (28, 29 ஏப்ரல் 1995), ஒரு அன்டனோவ் ஏஎன்-32 வானூர்தி (22 நவம்பர் 1995), 1 மில் எம்.ஐ.-17 உலங்கு வானூர்தி (22 ஜனவரி 1996) அழிக்கப்பட்டன. இந்த நான்கு தாக்குதல்களும் பலாலி விமானப் படைத்தளத்தில் இடம் பெற்று, 202 பேர் இறந்தனர். மேலும் பல தாக்குதல்களுக்கும் விடுதலைப் புலிகள் உரிமை கோரினர். அன்பரசி படையணி குறைந்தது ஐந்து இக்லா 1 ஏவுகணைச் செலுத்தியையும் 16 இற்கு மேற்பட்ட இக்லா 1 (எஸ்.ஏ 16) ஏவுகணைச் செலுத்திகளையும் கொண்டிருந்தது.

பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு

விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிப் பிரிவான இதன் பொருப்பாளர் அஸ்மி ஆனந்தபுரச் சண்டையில் பிடிபட்டார். மனிதநேய குண்டு செயலிழப்பு அமைப்பின் அறிக்கைகளின்படி, விடுதலைப் புலிகள் சொந்தத் தயாரிப்புக்களை அதிகமாக முன்னரங்க பாதுகாப்பு மற்றும் முகாம் பகுதிகளில் பயன்படுத்தினர். இவர்களின் தயாரிப்பு தனிநபர் எதிர்ப்பு கண்ணிவெடிகளாக ஜொனி 95, ஜொனி 99, ரங்கன் 99, இதழ் கண்ணிவெடி, மட்பானைக் கண்ணிவெடி, இளவழுதி 1 (இ.ரீ.எம் 01), இளவழுதி 11 (இ.ரீ.எம் 01) என்பன காணப்பட்டன. இவர்கள் 1999 இற்குப் பின் பொதுவாக ஜொனி 99, ரங்கன் 99 என்பவற்றை தனிநபர் எதிர்ப்பு கண்ணிவெடிகளைப் பயன்படுத்தினர். இவை இரண்டும் ‘பிளாஸ்டிக்’ மூலம் மூடப்பட்ட அழுத்த இயக்க கண்ணிவெடிகளாகும். இதற்கான 90 – 110 கிராம் சி4 வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. 

கைத்துப்பாக்கி குழு (பிஸ்டல் குழு)

கைத்துப்பாக்கி குழு அல்லது பிஸ்டல் குழு எனப்படுவது அரச முகவர்கள், பாதுகாப்புப் படையினர், படையினருக்கு தகவல் கொடுப்போர், மாற்றுக் கொள்கை உடையோர் மீது பல தாக்கிவிட்டு ஓடும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

துணைப் படைகள்

துணைப் படைகள் சிறப்பு அதிரடிப்படை என்ற சிறப்புப் பெயருடன் செயற்பட்ட குழுக்களாகும்.

எல்லைப் படை
எல்லைப் படை விடுதலைப் புலிகளினால் உள்வாங்கப்பட்ட பொதுமக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 5000 பேர் குடிமக்கள் படைகளாக இருந்து பின்னர் தாக்குதல், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டனர். இதில் இருந்த அங்கத்தவர்களுக்கு சிறுதொகை சம்பளம் வழங்கப்பட்டது.

கிராமப் படை
கிராமப் படை விடுதலைப் புலிகளின் துணைப்படையாக செயற்பட்டது. இது விநியோக நடவடிக்கைக்காக தாக்குதல் நடவடிக்கை உட்பட்ட செயற்பாடுகளில் பயன்படுத்தப்பட்டனர். இதில் கிட்டத்தட்ட 5000 உறுப்பினர்கள் இருந்தனர். 

துணைப் படை
துணைப் படை விடுதலைப் புலிகளின் உதவிப் படையாகச் செயற்பட்டது.

பெண்கள் பிரிவு

விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு இரண்டு படையணிகளைக் கொண்டு காணப்பட்டது. இவை தாக்குதல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

மாலதி படையணி

விடுதலைப் புலிகளின் இரண்டு பெண் படையணிகளில் இது ஒன்றாகும். விடுதலைப் புலிகளில் முதலாவது கொல்லப்பட்ட பெண் போராளியின் பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது. மாலதி என்ற போராளி இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிரான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டார். இதனுடைய கட்டளைத் தளபதியாக விதுஷாவும், துணைத் தளபதியாக கமலினியும் ஏப்ரல் 2009 இல் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட்டார்.

சோதியா படையணி

சோதியா படையணி விடுதலைப் புலிகளின் மகளீர் படையணிகளில் ஒன்றாகும். 1989 இல் உருவாக்கப்பட்ட பெண் பிரிவின் முதலாவது தளபதியாகச் செயற்பட்ட சோதியா என்பவரின் பெயர் இதற்குப் பெயரிடப்பட்டது. இவர் 1990 இல் மூளையுறை அழற்சியினால் மரணமடைந்தார். இதன் கட்டளைத் தளபதி துர்காவும் துணைத் தளபதி மோகனாவும் ஆனந்தபுரச் சமரில் கொல்லப்பட்டார்.

புலனாய்வுப் பிரிவு (உளவுப் பிரிவு)

புலி இயக்க பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை



புலி இயக்க பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை (TOSIS) என்பது 1983 இல் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுச் சேவையாகும். இது பொட்டு அம்மானால் தலைமை தாங்கி நடத்தப்பட, இதன் துணைத் தலைவராக கபில் அம்மான் காணப்பட்டார். கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட, புலிகளின் எல்லாத் தாக்குதல்களுக்கும் இது கருவியாகச் செயற்பட்டது. மாத்தையா எனப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘றோ’விற்கு இரகசியங்களை தெரிவித்ததைத் கண்டுபிடித்ததில் மிக முக்கிய பங்காற்றியது. புலிகளின் புலனாய்வுப் பிரிவை நிர்வாகிக்க 1988 இல் பிரபாகரனால் பொட்டு அம்மான் நியமிக்கப்பட்டார். இதற்கு முன் இதனை 1987 இல் இயக்கத்தைவிட்டு வெளியேறிய வசந்தன் என்பவரால் வழிநடத்தப்பட்டது. இதன் உறுப்பினர்கள் பலர் மே 2009 இல் கொல்லப்பட்டனர். இதன் தற்போதைய நிலை தெரியாது. இதில் வெளியகப் புலனாய்வுப் பிரிவு, உள்ளகப் புலனாய்வுப் பிரிவு ஆகிய பிரிவுகள் இயங்கின. 

இராணுவப் புலனாய்வு / படைப் புலனாய்வுப் பிரிவு

புலி இயக்க பாதுகாப்புப் புலனாய்வுச் சேவையிலிருந்து புலிகளின் இராணுவப் புலனாய்வு வேறாக சார்ல்ஸ் எனப்பட்ட சண்முகம் ரவிசங்கர் என்பவரால் வழிநடத்தப்பட்டது. இவர் இலங்கை படைத்துறையின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியின் ‘கிளைமோர்’ தாக்குதலில் ஜனவரி 2008 இல் மன்னார் மாவட்டத்தின் பாலமடுவில் வைத்துக் கொல்லப்பட்டார்.  

அரசியல் பிரிவு

மக்கள் நிர்வாக விடயங்களுக்காக புலிகளின் வேறு ஒரு பிரிவாக அரசியல் பிரிவு செயற்பட்டது. சு. ப. தமிழ்ச்செல்வன் நவம்பர் 2007 இல் இறக்கும் வரை இதன் தலைவராகச் செயற்பட்டார். இவருக்கும் பின் பாலசிங்கம் நடேசன் தலைமைப் பொறுப்பை ஏற்று, இவர் 18 மே 2009 இல் இறக்கும் வரை அதன் தலைவராக இருந்தார். அரசியல் பிரிவு பல திணைக்களங்களை தன்னுள் கொண்டிருந்தது. இது ஈழப்போர் முடியும் வரை கிட்டத்தட்ட ஒரு தனிநாடாகச் செயலாற்றியது. ஆயினும் இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது, புலிகளின் ஆலோசகரும் தலைமைப் பேச்சாளருமான அன்ரன் பாலசிங்கம் மூலம் அரசியல் பிரிவு உள்வாங்களுடன் செயற்படுத்தப்பட்டது. ஆயினும் முக்கிய தீர்மானங்கள் பாலசிங்கத்தினாலும் புலிகளின் தலைவர் பிரபாகரனினாலும் எடுக்கப்பட்டன.

தமிழீழ பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்

தமிழீழ பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (TEEDOR) விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சகல அபிவிருத்தி மக்கள் செயற்பாடுகளைக் கவனித்தது. கல்வி, போக்குவரத்து, நிர்வாக சேவைகள், சுகாதார சேவை, வங்கி, வனப் பாதுகாப்பு, மீன்பிடி, தொற்சாலைகள், வரி சேகரித்தல், வருவாய் சேகரித்தல், பொதுக் கருவிகள், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றாடல், வீதி அபிவிருத்தி, கட்டுமானம் என்பன இதனுள் உள்ளடங்கும். இதன் தலைமையகம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. ஈழ புரட்சிகர மாணவர் இயக்க (EROS) முன்னைய முக்கிய தலைவரான வி. பாலகுமாரன் இதற்குத் தலைமை தாங்கினார்.

சர்வதேச சமாதானச் செயலகம்

புலிகளின் சமாதானச் செயலகம் 2002 யுத்தத் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் பின் உருவாக்கப்பட்டு, இயக்கத்தின் சார்பில் வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணுவதற்கும், இது தொடர்பான அறிக்கைகளை ஊடகங்களுக்கு தெரிவிப்பதிலும் செயற்பட்டது. இதன் இயக்குனராக புலித்தேவன் எனப்பட்ட சீவரெட்ணம் பிரபாகரன் செயற்பட்டார்.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி

முன்னர், மாத்தையா எனப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற புலிகளின் அரசியற்கட்சிக்குத் தலைமை தாங்கினார். ஆயினும் அவர் இந்தியாவின் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியங்களைக் கசியவிட்டதால், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த அரசியற் கட்சியும் பின்னர் கைவிடப்பட்டது.

காவல்துறை / தமிழீழ காவல்துறை

புலிகளின் காவல் துறை 1992 இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இதன் தலைவராக பாலசிங்கம் நடேசன் இயங்கினார். இதன் கீழ் குற்றதடுப்புபிரிவு, விசாரணை பிரிவு, வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு, தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி, குற்றப் புலனாய்வுப் பிரிவு என்பன இயங்கின.

விடுதலைப் புலிகளின் நீதிமன்றம்

விடுதலைப் புலிகள் தனியான நீதிமன்றத்தை கொண்டிருந்தனர். இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுமக்கள், குற்ற வழக்குகளைக் கையாண்டது. இதன் பிரதான நீதிமன்றம் கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டிருந்தது. சட்ட ஆக்க கழகம், தமிழீழ நீதி மன்றம் என்பன தமிழீழ நிதித்துறையின் கீழ் இயங்கின. நிதித்துறையின் ஒரு அலகாகச் செயற்பட்ட இதனைப்போன்று,  நிதித்துறையின் பிற அலகுகளாக தமிழீழ நிர்வாக நிதிபிரிவு, தமிழீழ வழங்கல் பிரிவு, கொள்முதல் பிரிவு, அனைத்துலகப் பிரிவு, தமிழீழ போக்குவரத்து கழகம், தமிழீழ சட்டக்கல்லூரி ஆகியன காணப்பட்டன.

தமிழீழ வைப்பகம்

தமிழீழ வைப்பகம் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் கீழ் செயற்பட்ட உத்தியோகபூர்வமான அரசியல் பிரிவாகும். இது 1994 இல் ஆரம்பிக்கப்பட்டது. வன்னிப் பகுதியில் 11 கிளைகளைக் கொண்டு காணப்பட்டது. இது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் உள்ளவர்களுக்கு கடன் வசதிகளைச் செய்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிர்வாக தலைநகராகச் செயற்பட்ட கிளிநொச்சி இலங்கைப் படையினரால் 2 ஜனவரி 2009 அன்று கைப்பற்றப்பட்டதும் இதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

புலிகளின் குரல்

புலிகளின் குரல் 1990 இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட புலிகளின் வானொலி நிலையமாகும். ஒவ்வொரு வருடமும் 27 நவம்பர் புலிகளின் தலைவரது மாவீரர் உரையினை ஒலிபரப்பியது. 27 நவம்பர் 2007 அன்று மாவீரர் தின உரை ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தபோது இலங்கை விமானப்படையால் தாக்கப்பட்டது. இதனை இலங்கை விமானப்படையின் 23 தாக்குதல்களில் ஒன்று என புலிகள் குறிப்பிட்டனர்.

விளையாட்டுப் பிரிவு

விடுதலைப் புலிகளின் விளையாட்டுப் பிரிவு பாப்பா என்பவரால் தலைமை தாங்கி நடத்தப்பட்டது. இவர் மே 2009 இல் கைது செய்யப்பட்டு, தற்போது இலங்கை அரசின் புலனாய்வு சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.

உலக வலையமைப்பு 

விடுதலைப் புலிகளின் பிரிவுகளில் உலக வலையமைப்பு பிரிவு பற்றி அரிதாக அறிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதன்மையான செயற்பாடுகளான கொள்கை பரப்புதல், நிதி திரட்டல், ஆயுத பெறுதலும் கொண்டு வருதலும் ஆகியன உள்ளன. புலிகளின் உச்ச காலகட்டத்தில் 42 அலுவலகங்கள் உலகம் பூராகவும் காணப்பட்டது.

கேபி கிளை

கேபி அல்லது செல்வராசா பத்மநாதன் எனப்பட்ட குமரன் பத்மநாதன் புலிகளின் பிரதான ஆயுத கொள்வனவாளரும் இதற்கான சர்வதேச தலைவராகவும் 1893 முதல் 2002 இல் நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான போர் தவிர்ப்பு ஒப்பந்தம் வரை செயற்பட்டார். கேபி 23 இற்கு மேற்பட்ட பெயர்களில் 200 இற்கு மேற்பட்ட கடவுச்சீட்டுக்களுடன் பல கருப்புச் சந்தைகளுக்கு பயணம் செய்தார். இவரின் தொடர்ச்சியான ஆயுத வழங்கல் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஈழப்போருக்கு உரமளித்தது. கேபி கிளையின் முக்கிய அடைவுகளில் முக்கியமாக, 1994 இல் 60 டன் வெடிமருந்துகளை (50 டன் டிஎன்டி, 10 ஆர்டிஎக்ஸ்) உக்ரைனில் இருந்து வங்காளதேச பாதுகாப்பு அமைச்சரின் பயனர் சான்றிதழை மோசடி செய்து தருவித்தது, இலங்கை இராணுவத்திற்காக தன்சானியாவிலிருந்து வாங்கப்பட்ட 81 மிமீ சிறு பீரங்கிக்கான 32,400 குண்டுகளை களவாடியது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 2002 இல் கஸ்ரோவினாலும் தமிழ்ச்செல்வனானலும் ஊழல், போதிய செயற்பாடின்மை, பாலியல் ஒழுங்கின்மை போற்றவற்றுக்காக கேபி குற்றம் சுமத்தப்பட்டார். பின்னர் 2003 இல் கேபி ஒதுக்கப்பட்டு, தானாக ஓய்வுக்கு உட்படுத்தப்பட்டார். 2008 இல் படையினர் தொடர்ச்சியாக புலிகளை நிலைகுலையச் செய்தபோது பிரபாகரனால் மீளவும் இயக்கத்திற்கு அழைக்கப்பட்ட, ஜனவரி 2009 இல் இணைந்து கொண்டார். புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச தொடர்பாடல் திணைக்களத்திற்கு அவர் நியமிக்கப்பட்டார். இலங்கைப் புலனாய்வுப் பிரிவு மலேசிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஆகஸ்ட் 2009 இல் கோலாலம்பூரில் உள்ள டியூன் விடுதியில் அவரைக் கைது செய்தது. 

கஸ்ரோ கிளை

2002 முதல் கேபி கிளையிலிருந்து புலிகள் கஸ்ரோ எனப்பட்ட வீரக்கத்தி மணிவண்ணன் தலைமையில் ஆயுத வழங்கல் மற்றும் பிற வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான சர்வதேச செயலகத்தைச் சார்ந்து இருந்தனர். கஸ்ரோ கிளிநொச்சியில் இருந்தாலும் வெளிநாடுகளில் உள்ள கிளை வலையமைப்பு வழிநடத்தினார். இவரால் நியமிக்கப்பட்ட நெடியவன் எனப்பட்ட போரின்பநாயகம் சிவாபரன் நோர்வேயில் புலிகளின் தலைவராகச் செயற்பட்டார். கஸ்ரோ முல்லைத்தீவின் வெள்ளமுள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தின் இறுதித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஐயண்ணா குழு

ஐயண்ணா எனப்பட்ட பொன்னையா ஆனந்தராஜா தலைமையிலான குழு புலிகளின் வட கொரிய அரசாங்கத்துடனான தொடர்புக்குப் பொறுப்பாகவிருந்தது. இவர் 1997 முதல் பேங்காக்கிலுள்ள வடகொரியத் தூதரகத்தில் வேலை செய்தார். இக்குழு புலிகளின் புலனாய்வு மற்றும் நிதி உதவி, வருவாய் செய்பாடுகளை கண்கானித்து, நிச்சயப்படுத்தும் பகுதியாகச் செயற்பட்டது. 1997 முதல் புலிகளின் பல ஆயுதக் கொள்வனவுகள் வடகொரியாவிலிருந்து வந்தது.

தொலைக்காட்சி நிலையங்கள்

புலிகளின் உலக வலையமைப்பு சில தொலைக்காட்சி அலைவரிசைகளை ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் கொண்டிருந்தது. தரிசனம் ரீவி, தமிழ் தொலைக்காட்சி வலையமைப்பு, மக்கள் ரீவி, யூரோ ரீவி ஆகியன பிரதான கொள்கை பரப்பு ஊடகங்களாகும். தரிசனம் பிரான்ஸ், இஸ்ரேல், கொங்கொங் நிறுவனங்களூடாக ஒலிபரப்புச் செய்தது. இது பிரான்ஸ், இஸ்ரேல் செய்மதியான குளோப்காஸ்ட் என்பதை பயன்படுத்தியது. 2008 இல் தரிசனம் இஸ்ரேலால் தடை செய்யப்பட்டது. மே 2007 இல் தமிழ் தொலைக்காட்சி வலையமைப்பை பிரான்ஸ் தடை செய்தது. மே 2008 இல் இத்தாலி யூரோ ரீவியைத் தடை செய்தது. சென்னையில் புலி ஆதரவுக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி உதவியுடன் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

பன்னாட்டு வானொலி

இலண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் வானொலி 1997 இல் ஆரம்பிக்கப்பட்டது.

பிரசுரங்கள்

எண்ணிம, அச்சு ஊடகங்கள் பல புலிகளின் உலக வலையமைப்பினால் செயற்படுத்தப்பட்டன. இவற்றில் தமிழ்நெட், பரிஸை தளமாகக் கொண்ட சங்கதி, ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட பதிவு குறிப்பிடத்தக்கனவாகும். பரிஸ், இலண்டன், கனடா, அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்டு அச்சு ஊடகங்களில் அதிகம் பதிப்பிக்கப்பட்ட ஈழமுரசு வெளியாகியது.

பிற இராணுவப் பிரிவுகள்

சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, குறி பார்த்துச் சுடும் படையணி, ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு, பாதுகாவலர் பிரிவு, முறியடிப்புப் பிரிவு, கப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு காவல் அணி, ஆழ ஊடுருவும் படையணி, உந்துருளிப் படையணி, களமுனை முறியடிப்புப் பிரிவு, களமுனை மருத்துவப் பிரிவு ஆகிய பிரிவுகள் சிறப்புச் செயல்பாடுகளுக்காக இயங்கின.

பிற

வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு, கணிணி தொழில்நுட்ப பிரிவு, இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு, போர்கருவி தொழிற்சாலை (ஆயுத உற்பத்தி, வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு), மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு (இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு), தமிழீழ படைத்துறைப் பள்ளி (தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி), பொறியியல் பிரிவு, விசேட வரைபடப் பிரிவு ஆகியன இராணுவ செயற்பாடுகளுக்கு உதவியாகச் செயற்பட்டன.

  • விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி
  • திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை
  • பொற்காலம் வண்ணக் கலையகம்
  • அருச்சுனா புகைப்படக் கலையகம்
  • ஒளிநிலா திரையரங்கு
  • தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்
  • தமிழீழ கலை பண்பாட்டு கழகம்
  • விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு
  • சூழல் நல்லாட்சி ஆணையம்
  • தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு
  • பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
  • பொருண்மிய மதியுரைகம்
  • தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
  • ஓளிக்கலைப்பிரிவு, தமிழிழ தேசிய தெலைக்காட்சி, ஒளி வீச்சு ஒலிபரப்பு, புலிகளின் குரல் பத்திரிகை, ஈழநாதம் பத்திரிகை, சுதந்திரப் பறவைகள் பத்திரிகை, விடுதலைப்புலிகள் ஏடு
  • மருத்துவ பிரிவு, திலீபன் மருத்துவ சேவை 
  • நந்தவனம் - வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம், சுங்க வரித்துறை. 
  • தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம், சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி
  • அரசறிவியற் கல்லூரி
  • வன வளத்துறை
  • கலை பண்பாட்டுக்கழகம்
  • ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு
  • போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு
  • அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்
  • மீன்பிடி வளத்துறை
  • விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
  • தொழில் நுட்பக் கல்லூரி
  • சூழல் நல்லாட்சி ஆணையம்
  • தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை
  • தமிழீழ போக்குவரவுக் கழகம்
  • மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு)
  • வளங்கள் பகுதி
  • மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
  • விலங்கியல் பண்ணைகள்
  • விவசாயத் திணைக்களம்
  • தமிழ்மொழி காப்பகம்
  • தமிழீழ கல்விக் கழகம்
  • தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
  • காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது)
  • செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது)
  • செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது)
  • வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
  • அன்பு முதியோர் பேணலகம்
  • இனிய வாழ்வு இல்லம்
  • சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)
  • நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
  • மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
  • சீர்திருத்தப் பள்ளி
  • முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி)
  • உதயதாரகை (விதவைகளுக்கானது)
  • பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
  • பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது)
  • எழுகை தையல் பயிற்சி மையம்
  • மாணவர் அமைப்பு
  • அறிவு அமுது புத்தகசாலை
  • ஒளிப்பட பதிவுப் பிரிவு திரைப்பட வெளியிட்டுப் பிரிவு
  • நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு)
  • தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது)
  • தமிழீழ வானொலி
  • தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
  • தமிழீழ இசைக்குழு
  • காலணி (பாதணி உற்பத்தி மையம்)
  • சேரன் உற்பத்திப் பிரிவு
  • சேரன் வாணிபம்
  • சேரன் சுவையகம்
  • சேரன் வெதுப்பகம்
  • சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி)
  • பாண்டியன் உற்பத்திப் பிரிவு
  • பாண்டியன் சுவையூற்று
  • பாண்டியன் பல்பொருள் வாணிபம்
  • சோழன் தயாரிப்புகள்
  • பொன்னம்மான் உரைவகை வாணிபம்
  • தென்றல் இலத்திரனியலகம்
  • தமிழ்மதி நகை மாடம்
  • தமிழ்நிலா நகை மாடம்
  • தமிழரசி நகை மாடம்
  • அந்திவானம் பதிப்பகம்
  • இளந்தென்றல் குடிவகைப் பிரிவு
  • இளவேனில் எரிபொருள் நிலையம்
  • இளந்தென்றல் தங்ககம் (தங்குமிடம்)
  • 1-9 தங்ககம் (தங்குமிடம்)
  • மருதம் வாணிபம்
  • மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்)
  • மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி)
  • கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை
  • மாவீரர் அரங்குகள்
  • மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்
  • மாவீரர் நினைவு வீதிகள்
  • மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்
  • மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்
  • மாவீரர் நினைவுப் பூங்காக்கள்
  • மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்
  • மாவீரர் நினைவு நூலகங்கள்
  • மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்
  • மாவீரர் பணிமனை
  • இரணைமடு நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டது.


நிதி, நிர்வாக, நீதி, இராணுவ, பிரச்சார, கலை, கலாச்சார அலகுகள் பல காணப்பட்டன.