![]() |
கொரகொல்லை தேசிய வனம் |
கொரகொல்லை ஒரு தாழ்நில மழைக்காடாகும். இப்பூங்கா உக்கல் மண் அமைப்பைக் கொண்டதும் வருடம் முழுவதும் சூடான காலநிலையுடன் காணப்படும். இப்பகுதியில் எண்ணை தாவரம், கூந்தற்பனை, நெதுன், காட்டு மா, அரச மரம், ஏழிலைப்பாலை, வகுளம், ஈரப்பலா போன்ற தாவரங்கள் மிகுதியாகவுள்ளன. மேலும் யானைக் கொழிஞ்சி மரங்களையும் இப்பகுதியில் காணலாம். காட்டுப்பகுதியில் தேக்கு, கொன்றை போன்ற மரங்களைக் காணலாம்.
மீன்பிடிப் பூனை, வெண் புள்ளிச் சருகுமான், செந்நரி, பழுப்பு மலை அணில் ஆகிய பாலூட்டிகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. கொரகொல்லை பறவைகளைப் பார்க்கும் இடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு 68 பறவை இனங்கள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்டைக்கிளி, கரு நெஞ்சு கொண்டைக்குருவி, குக்குறுவான், ஆசியக் குயில் போன்ற இங்கு பொதுவாகக் காணப்படும். இலங்கை பழுப்பு இருவாய்ச்சி, இலங்கை தொங்கும் கிளி, லயாட் குட்டைக்கிளி, சின்ன மீன்கொத்தி போன்ற பறவைகளும் காணப்படுகின்றன. அருகிய நறுக்கி பட்டாம்பூச்சி, இலங்கை அழகி, நீல மோர்மன் போன்ற பட்டாம்பூச்சிகள் இங்கு பொதுவாகக் காணப்படும். ஆமை இனங்கள் உட்பட்ட பல அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக