ஒரு கோலம் வலைவடிவ நகர அமைப்பில் புள்ளிகளைக் கொண்டு கோடுகளினாலும் வளைவுகளினாலும் வரையப்படும். தென் இந்தியாவில் பல இடங்களில் அரிசி மாவு / வெண்கட்டி பொடியுடன் நிறத்தூள் சேர்த்து கோலம் வரையப் பயன்படுத்தப்படுகின்றது
குபேரக்கோலம் மாயச் சதுரம் 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 ஆகிய இலக்கங்களைக் கொண்டு பின்வருமாறு வரையப்படும்.
27 | 20 | 25 |
22 | 24 | 26 |
23 | 28 | 21 |
இந்த மாயச் சதுரத்தில் ஒவ்வொரு வரிசையிலும் நிரலிலும் எண்கள் காணப்படும். இவற்றை எந்த ஒழுங்கில் கூட்டினாலும் விடை 72 வரும். முதலில் இக்கோலத்தில் வரிகளை வரையப்படும். பின்பு 24, 28, 23, 22, 27, 20, 25, 26, 21 என்ற ஒழுங்கில் எண்கள் எழுதப்படும். பொதுவாக ஒவ்வொரு கட்டத்திலும் நாணயமும் பூவும் இடப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக