மொழிபெயர்

இலங்கை பயங்கரவாத தடைச் சட்டம்

இலங்கை பயங்கரவாத தடைச் சட்டம் (Prevention of Terrorism Act; சுருக்கமாக PTA) எனப்படுவது இலங்கை 1978 பயங்கரவாத தடைச் சட்டம் ஆகும். இது காவல் துறைக்கு சந்தேகப்படுவோர் மீது தேடுதல், கைதுசெய்தல், அடைத்தல் ஆகிய பரந்த அதிகாரத்தைக் கொடுக்கின்றது. இது முதன்முதலில் 1978 இல் இலங்கையின் முன்னைய சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனாவினால் தற்காலிகச் சட்டமாக்கப்பட்டது. பின்னர் 1982 இல் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.

PTA

சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டார் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் (ஒவ்வொரு 3 மாதமும் புதுப்பிக்கலாம்) தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். சட்டத்திற்கு புறம்பான செயற்பாடு என்பது சுவர் மீது சுவரொட்டி ஒட்டுதல் என்பதுகூட உள்ளடக்கப்படும். இதற்கான தண்டனையாக மரணம் வழங்கப்படலாம். சாதாரண சட்டத்தில் இல்லாத குற்றங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உதாரணம்: பயங்கரவாதி எங்கு இருக்கிறார் என்பது தெரிந்தும் அதனை காவல் துறைக்கு அறிவிக்காது இருத்தல் குற்றமும், அதன் தண்டனையாக 5 வருடங்கள் சிறை அனுபவிக்க வேண்டும். ஒரு நபர் ஓர் இரவு பயங்கரவாதியுடன் தங்கியிருத்தால், அது அதிகபட்சம் 25 வருடங்கள் சிறைவாசம் பெற வேண்டிய குற்றமாகும்.

விமர்சனம்
வட கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு எதிராக சரிசமமற்ற விகிதத்தில் இச்சட்டம் பயன்படுத்தப்படதென் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கெதிராக சித்திரவதை, மரண தண்டனை மற்றும் பொறுப்புக்கூறல் இன்மைக்காகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பற்ற தமிழ் இளைஞர்கள் சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றுக்காக விமர்சகர்கள் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தினர். நீதிமன்ற நீதிபதிகள் தடுப்புக்காவலில் உள்ளவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்டு, அவர்கள் பெயர்கள் சிறைச்சாலையில் பதிவு செய்யப்பட்டும், பயங்கரவாத தடைச் சட்ட விதியின்படி அவர்கள் இலங்கை படைத்துறை முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. இச்சட்டத்தின் கீழ், தடுத்தல் மற்றும் பிழையான “சித்திரவதை கூடம்” போன்ற நடவடிக்கைகளுக்கு படைத்துறை முகாம்கள் பயன்படுத்தப்பட்டன. இராணுவ முகாம் சித்திரவதை நிகழ்த்தல் மற்றும் சட்ட விரோத அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு கட்டப்பட்டன. யுத்தத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் கண்டனச் செயற்பாட்டிற்காக கைது செய்தலுக்கும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக