ஒன்பது வளைவுகள் பாலம் |
கட்டுமானப் பொருள் | கல், செங்கல், சீமெந்து |
நீளம் | 300 அடி |
அகலம் | 25 அடி |
உயரம் | 80 அடி |
தூண்கள் | 9 |
கட்டுமான நிறைவு | 1921 |
புவியில் அமைவு | 6.876709°N 81.061622°E |
ஒன்பது வளைவுகள் பாலம் பதுளை மாவட்டத்திலுள்ள தெமோதரை என்ற இடத்தில் எல்ல என்ற இடத்திற்கும் தெமோதரை தொடரூந்து நிலையத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியின் சுற்றுவட்டாரம் பாலத்தின் கட்டுமான புதுமை, பக்கத்து மலைக் குன்று இருக்கும் பசுமை என்பவற்றால் உல்லாசப் பயணிகளைக் கவருமிடமாக உள்ளது.
பாலத்திற்கான கட்டட வேலை நடந்து ஆரம்பிக்கப்பட்டபோது, முதலாம் உலகப்போர் நடைபெற்றது. இதனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இரும்பு பிரித்தானியாவின் சண்டை முனைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது என்ற பொதுவான கருத்து உள்ளது. இதன் காரணமாக, வேலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், இரும்பு இல்லாமல் கல், செங்கல், சீமெந்து ஆகியவற்றைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது என்ற சொல்லப்படுகின்றது. இலங்கை தொடரூந்துயில் இது ஒரு முக்கிய உருவமாக இருப்பதால், இந்தப் பாலத்தினூடே தொடரூந்து வரும் அழகிய காட்சிகள் இன்றும் இலங்கை தொடரூந்து நிலையங்களிலும், விளம்பரப் பலகைகளிலும் காணலாம்.
அறியாத செய்தி. நன்றி.
பதிலளிநீக்குநன்றி
நீக்குVisitors
பதிலளிநீக்கு