மொழிபெயர்

தமிழர் வரலாறு (காலக்கோடு)

இக்கட்டுரை தமிழர் வரலாறு (Timeline of Tamil history), தமிழர் வரலாற்றுச் சுருக்கம் அல்லது தமிழர் வரலாற்றுக் காலக்கோடு (Chronology of Tamil history) ஆகும். தமிழர் இன்று வாழும் பகுதிகளில் நிகழ்ந்த ஆரம்ப காலச் நிகழ்வுகள் முதல் இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை இங்கு காணலாம். தமிழ் நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் வாழும் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளை இது பதிவு செய்கின்றது.

காலக்கோடு

வரலாற்றுக்கு முந்திய காலம்

  • சுமார் கி.மு. 150,000 - 100,000: வட தமிழ் நாட்டில் கோமின்ச், அக்யூலியன் தொழில் நுட்பங்கள் இருந்ததற்கான சான்றுகள்
  • சுமார் கி.மு. 30,000: வட தமிழ் நாட்டில் பழைய கற்காலம் தொழில் நுட்பங்கள்
  • சுமார் கி.மு. 8000 - 3000: முன் மட்பாண்ட குறுனிக்கல் அல்லது நுண்கல் கால தொழிநுட்பம்
  • சுமார் கி.மு. 3000 – 1000: பையம் பள்ளியில் புதிய கற்கால தொழிநுட்பம் அல்லது தமிழகத்தில் புதிய கற்காலம்
  • சுமார் கி.மு. 2,000 – 300: தமிழகத்தின் இரும்புக்காலம்


முற்சங்க காலம்

  • சுமார் கி.மு. 1,000 – 300: பெருங்கற்காலம்
  • சுமார் கி.மு. 600: தமிழ்ப் பிராமி நடைமுறைத் தமிழ் எழுத்தாகியது.
  • உவூட்சு எஃகு உற்பத்தி கி.மு 6 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு, சேரர்களால் உலகிற்கு கொண்டு செல்லப்பட்டது.
  • சுமார் கி.மு. 50: தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப்பட்டது.
  • சுமார் கி.மு. 500: சங்ககாலப் பாண்டியர்களால் தமிழக முத்திரை காசுகள் வெளியிடப்பட்டன.
  • சுமார் கி.மு. 400: பண்டைய சேர துறைமுக நகர் காவிரிப்பூம்பட்டினம் கடலால் அழிக்கப்பட்டது. 
  • சுமார் கி.மு. 300: கிரேக்க சமூக ஆய்வாளர் மெகஸ்தெனஸ் பாண்டிய தலைநகரான மதுரை பற்றிய குறிப்பும் பண்டையா என்னும் அரசி பாண்டியர் நாட்டை ஆண்டதாகக் குறிப்பும்
  • சுமார் கி.மு. 250: அசோகர் கல்வெட்டுகல்வெட்டு பண்டைய தமிழகத்தின் நான்கு பேரரசுகள் (சேரர், சோழர், பாண்டியர், வேளிர்) பற்றிப் பதிவு செய்தது.
  • சுமார் கி.மு. 237 - 215: குதிரை வணிகர்கள் சோழ சேனனும் குத்திகனும் அனுராதபுரத்தை ஆட்சி செய்தல்
  • சுமார் கி.மு. 200: தமிழ் இளவரசர் எல்லாளன் இலங்கையில் ஆட்சி செய்கிறார்.


சங்ககாலம்

  • சுமார் கி.மு. 300 - கி.பி. 200: சங்ககாலத்தில் சங்க இலக்கிய நூல்கள் உருவாக்கப்பட்டன.
  • சுமார் கி.மு. 500: சங்ககாலப் பாண்டியர்களால் தமிழக முத்திரை காசுகள் வெளியிடப்பட்டன.
  • சுமார் கி.மு. 200: நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியில் சமண மதம் தமிழகத்தில் ஆதரிக்கப்படுகிறது.
  • சுமார் கி.மு. 150: தமிழ் அரசர்களின் கூட்டாட்சியை வெற்றி கொண்டதாக கலிங்க நாட்டு அரசன் கதிகும்பம் எனும் கல்வெட்டில் பதிகிறான்.
  • சுமார் கி.மு. 103 - 88: பஞ்ச பாண்டியர் அனுராதபுரத்தை வெற்றி கொண்டு, ஆட்சி செய்தல்
  • சுமார் கி.பி. 1 – 100: பெரிப்ளஸ் (உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட ஒரு செலவுக் குறிப்பேடு / செங்கடல் செலவு) பண்டைய சேர, பாண்டிய அரசுகள் பற்றி குறிப்பிடுவதுடன் தமிழகத்தின் பகுதியான லிமிரிகே (மலபார் கடற்கரை) பற்றியும் குறிப்பிடுகின்றது.
  • சுமார் கி.பி. 13: கிரேக்க வரலாற்றாசிரியர் தமஸ்குவின் நிகோலஸ், பாண்டிய மன்னன் ஒருவன் சீசர் அகஸ்டஸ் மன்னனுக்கு அனுப்பிய தூதுவரைச் சந்திக்கிறார்.
  • சுமார் 77 – 140: கிரேக்க-உரோம எழுத்தாளர்களான பிலினியும் தாலமியும் மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாகக் குறித்தனர்.
  • சுமார் கி.பி.130: சேர அரசன் உதியஞ்சேரலாதன் சேர நாட்டை ஆள்கிறான்.
  • சுமார் கி.பி. 175 – 195: இலங்கை அரசன் கஜபாகு காலத்தில் சேரன் செங்குட்டுவன் மற்றும் கரிகால் சோழன் ஆள்கின்றனர்.
  • சுமார் கி.மு. 190: சேர நாட்டை சேர அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆள்கிறான்.
  • சுமார் 190: சாவகம் (இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு) எனும் தீவில் தமிழ் பேசப்பட்டது.
  • சுமார் கி.பி. 200: எழுத்து பரவலாகி, தமிழ் பிராமியானது தமிழ் எழுத்தின் முன்னோடியாகி வட்டெழுத்தைத் தோற்றுவிக்கிறது.
  • சுமார் கி.பி. 200: பாண்டிய நெடுஞ்செழியன் மதுரையில் ஆட்சி செய்கிறான். தலையாலங்கானப்போரில் எதிரிகளை வெற்றி கொள்கிறார்.
  • சுமார் 250: சீன நாட்டு வரலாற்றறிஞர் சுவான்சாங் ,பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.


பிற்சங்க காலம்

  • சுமார் 300 – 325: சிவகந்தவர்மன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் அரசைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தல்.
  • சுமார் 300 – 590: சிலப்பதிகாரம் எழுதப்பட்டது.
  • சுமார் 300 - 590: களப்பிரர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்துப் பாரம்பரிய ஆட்சியை மாற்றுகின்றனர்.
  • சுமார் 340: குப்தப் பேரரசு தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்தல். முதலாம் விட்ணுகோபன் சமுத்திர குப்தனால் தோற்கடிக்கப்பட்டதால் தொண்டை நாடு முழுதும் களப்பிரர் கீழிருந்த சோழர்களால் ஆக்கிரமிக்கப்படுதல்.
  • சுமார் 361: உரோமானியப் பேரரசனான யூலியனுக்கு பாண்டியர் தூதனுப்புதல்.
  • சுமார் 436 – 463: களப்பிரர் ஆட்சியில் தமிழகத்திலிருந்து இலங்கை சென்ற பாண்டிய மன்னர்கள், இராசராட்டிரம் என்னும் அரசை ஏற்படுத்தி ஆண்டனர்.
  • சுமார் 436 – 460: பல்லவன் இரண்டாம் கந்தவர்மன் என்பவனின் மூன்று மகன்களும் பல்லவ அரசை வடதமிழகம் முழுதும் விரிவுபடுத்தினர். மூன்றாம் மகனான இரண்டாம் குமாரவிட்ணு களப்பிரர் கீழிருந்த சோழர்களின் ஆதிக்கத்திலிருந்த காஞ்சியை மீட்கிறான்.
  • சுமார் 500: திருக்குறள் எழுதப்படல்


பல்லவர், பாண்டியர்

  • சுமார் 550-580: பல்லவ சிம்ம விஷ்ணு தொண்டை, சோழ நாடுகளை களப்பிரர் ஆட்சியிலிருந்து மீட்டல். 
  • சுமார் 550-580: பாண்டிய கடுங்கோன் மதுரையை களப்பிரர் ஆட்சியிலிருந்து மீட்டு, தெற்கிலிருந்து களப்பிரரை விரட்டல்.
  • சுமார் 590-630: காஞ்சிபுரத்தில் பல்லவ முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சி.
  • சுமார் 610: மகேந்திரவர்மனை சமணத்திலிருந்து சைவ சமயத் துறவி திருநாவுக்கரசு நாயனார் மதம் மற்றுகிறார்
  • சுமார் 628: சாளுக்கிய இரண்டாம் புலிகேசி பல்லவ அரசு மீது படையெடுத்து காஞ்சிபுரத்தை முற்றுகையிடுகிறார்.
  • சுமார் 630-668: பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் தொண்டைமண்டலத்தில் ஆட்சி
  • சுமார் 642: சாளுக்கியர் மீது முதலாம் நரசிம்ம பல்லவன் படையெடுத்து, பாதமியை நீக்குதல். புலிகேசி யுத்தத்தில் கொல்லப்படல்
  • சுமார் 670-700: பாண்டிய அரிகேசரி மாறவர்மன் மதுரையில் ஆட்சி
  • சுமார் 700-728: பல்லவ ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலையும் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதிகளில் பல கோயில்களைக் கட்டுதல்
  • சுமார் 700-730: கோச்சடையான் ரணதீரன் கொங்கு நாடு வரை பாண்டிய அரசை விரிவாக்குதல்
  • சுமார் 731-765: பாண்டிய மாறவர்மன் ராஜசிம்மன் சாளுக்கிய இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து பல்லவ மன்னன் நந்திவர்மனைத் தாக்குதல்
  • சுமார் 735: சாளுக்கிய இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாடு மீது படையெடுத்து, தலைநகர் காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்தல்
  • சுமார் 760: பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மன் கங்க அரசு மீது போர்த் தொடுத்து, அதைத் தோற்கடித்தல்
  • சுமார் 765-815: பாண்டிய பராந்தகன் நெடுஞ்சடையான் மதுரையை ஆளுதல்
  • சுமார் 767: பாண்டியப் படைகள் காவிரி ஆற்றின் தெற்கில் பல்லவர்களைத் தோற்கடித்தல்
  • சுமார் 800-830: முதலாம் வரகுனன் பாண்டிய அரசனாகி, பல்லவ அரசன் நந்திவர்மனைத் தோற்கடித்து, திருச்சிராப்பள்ளி வரை அரசை விரிவாக்குதல்
  • சுமார் 830-862: பாண்டிய சீவல்லபன் மதுரையில் ஆட்சி
  • சுமார் 840: சீவல்லபன் இலங்கை மீது போர்த் தொடுத்து முதலாம் சேனனிடமிருந்து இலங்கையின் வட பகுதிகளைக் கைப்பற்றல்
  • சுமார் 848: காவிரி கழிமுக பகுதியை ஆட்சி செய்த முத்தரையர் ஆட்சியாளர்களை, வெற்றிகொண்டு விஜயாலய சோழன் தஞ்சாவூரில் எழுச்சி
  • சுமார் 825-850: பல்லவ மூன்றாம் நந்திவர்மன் பாண்டிய அரசைத் தோற்கடித்து வைகை வரை பல்லவப் பேரரசை விரிவாக்குதல்
  • சுமார் 859: பாண்டிய சீமாறன் சீவவல்லபன் கும்பகோணப் போரில் பல்லவர்களைத் தோற்கடித்தல்
  • சுமார் 862: இரண்டாம் சேனன் தலைமையிலான சிங்களப் படைகள் பாண்டிய அரசு மீது போர் தொடுத்து, சிறிமாறனை போரில் கொன்று, மதுரையைக் கொள்ளையிடல்.


சோழர் காலம்

  • சுமார் 903: பல்லவ அரசன் ஆதித்த அபராஜிதனைத் சோழர் தோற்கடித்தல்
  • சுமார் 949: சோழர் படையை மூன்றாம் இரஸ்ராகுப்தா கிருஷ்ணா தக்கோலம் போரில் தோற்கடிக்கிறான்
  • சுமார் 985: முதலாம் இராஜ இராஜ சோழன் அரியணை ஏறல்
  • சுமார் 1010: இராஜ இராஜன் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டி முடித்தல்
  • சு. 1012: முதலாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறல்
  • சு. 1017–1055: இலங்கையில் சோழர் ஆட்சி
  • சு. 1023: இராசேந்திர சோழன் கங்கைக்கு விரிவாக்கல் பயணம்
  • சு. 1025: சோழர் கடற்படை சிறீவிஜய (தற்போது மலேசியாவில் உள்ள பகுதி) அரசனைத் தோற்கடித்தல்
  • சு. 1054: மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிரான கொப்பம் போரில் இராசேந்திர சோழன் மரணமடைதல்
  • சு. 1070: முதலாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறல்
  • சு. 1118: விக்கிரம சோழன்
  • சு. 1133: இரண்டாம் குலோத்துங்க சோழன்
  • சு. 1146: இரண்டாம் இராஜராஜ சோழன்
  • சு. 1163: இரண்டாம் இராஜாதிராஜ சோழன்
  • சு. 1178: மூன்றாம் குலோத்துங்க சோழன்
  • சு. 1216: மூன்றாம் இராஜராஜ சோழன்
  • சு. 1246: மூன்றாம் இராஜேந்திர சோழன்


சோழரிடமிருந்து பாண்டியருக்கு

  • சு. 1190-1260: ஆறகழூரைத் தலைநகராக்கி மகாதை மண்டலத்தில்  பானா வம்ச ஆட்சி
  • சு. 1216 – 1238: கடவா வம்சமும் மாறவர்மன் சுந்தரபாண்டியனும் தென் இந்தியாவை ஆட்சி செய்தல்
  • சு. 1216: காடவர் வம்சம்
  • சு. 1236 - சம்புவரையர் வடதமிழகத்தைக் கைப்பற்றி நாயக்கர் காலம் வரை ஆட்சி செய்தல்


பாண்டியர் எழுச்சியும் இஸ்லாமியர் ஆட்சியும்

  • 1214 - 1236: இலங்கை மீதான கலிங்கப் படையெடுப்பு
  • 1251: முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறல்
  • 1268: முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் வட இலங்கையைக் கைப்பற்றி அங்கு குலசேகர சிங்கையாரியனை ஆட்சியில் அமர்த்தல். (அதற்குப் பின் இவன் வழியினரான ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை (வட இலங்கை) கி.பி. 1619 வரை ஆண்டனர்.)
  • 1279: மூன்றாம் இராஜேந்திர சோழனின் இழப்பைத் தொடர்ந்து சோழ ஆட்சியின் முடிவு
  • 1268-1310: குலசேகர பாண்டியன் மதுரையில் ஆட்சி
  • 1308: அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் தமிழ்நாடு வழியாக தேவகிரியை ஆக்கிரமித்தல்
  • 1310: சுந்தர பாண்டியன் தன் தந்தை குலசேகரப் பாண்டினைக் கொன்று அரசனாகுதல். இது உள்ளூர் கலகமாக மாறித் தன் சகோதரன் வீரபாண்டியனால் தோற்கடிக்கப்படுதல்
  • 1311: மாலிக் காபூர் பாண்டிய நாட்டை ஆக்கிரமித்து மதுரையைத் தாக்குதல்
  • 1327-1370: மதுரை சுல்தான் மதுரையை ஆட்சி செய்தல்


விஜயநகரப் பேரரசு, திருமலை நாயக்கர், ஐரோப்பிய ஆட்சி

  • 1370: தமிழ் நாடு முழுவதையும் விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர் புக்காவும் அவனுடைய மகன் குமார கமப்னாவும் கைப்பற்றுகிறார்கள்.
  • 1422: சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் தென்காசி, பாண்டியர் தலைநகராக இருந்தது.
  • 1505: இலங்கையில் போர்த்துக்கேயயர் வருகை
  • 1518: சோழ மண்டலக் கடற்கரையின் பழவேற்காட்டில் போர்த்துக்கேயயர் தரையிறங்குதல்
  • 1519: முதலாம் சங்கிலி யாழ்ப்பாண அரசனாகுதல்
  • 1535: தஞ்சாவூரில் நாயக்கர்கள் ஆட்சியை ஏற்படுத்திய சேவப்பா நாயக்கரை விஜயநகரப் பேரரசின் அச்சுத ராயன் தஞ்சாவூரை ஆள நியமித்தல்
  • 1532–1580: சேவப்பா நாயக்கர் தஞ்சாவூரில் முதலாவது சுதந்திர நாயக்கராக ஆட்சி செய்தல்
  • 1600-1645: கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனின் ஆட்சி முடிவோடு பாண்டியர்கள் ஆட்சி மறைதல். தஞ்சை நாயக்கர்களில் முக்கியமான ரகுநாத நாயக்கர்
  • 1609: பழவேற்காட்டில் இடச்சு குடியேற்றங்கள் அமைத்தல்
  • 1609: யாழ்ப்பாண அரசு போத்துக்கேயரிடம் வீழ்தலும் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சியும்
  • 1621: யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலி கோவாவில் வைத்து போர்த்துக்கேயரால் தூக்கிலிடப்படல்
  • 1623-1659: மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி
  • 1639 பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சென்னைப் பட்டினத்தினை வாங்கி ஜோர்ச் கோட்டையை அமைத்தல்
  • 1652: தஞ்சாவூரும் சிங்கையும் விஜயபுர சுல்தானிடம் வீழ்தல்
  • 1656: மதுரை நாயக்கர் திருமலைக்கு எதிராக மைசூர் படைகள் சேலத்தை ஆக்கிரமித்தல்
  • 1658: இலங்கையில் இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி
  • 1675: விஜயபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி மராத்தியப் படை நகர்வு, ஏகோயி தன்னைத்தானே அரசனாக அறிவித்தல்
  • 1692: முகாலய பேரரரசின் பிரதிநிதி நவாப் சுல்பிகார் அலிகான் ஆற்காடு நவாப்பை அமைத்தல்
  • 1746: பிரான்சிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோர்ச் கோட்டையை தாக்கி, கைப்பற்றல்
  • 1749: பிரித்தானியர் ஜோர்ச் கோட்டையை மீளவும் கைப்பற்றல்
  • 1751: றொபட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கி, கைப்பற்றல்.
  • 1796: இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்
  • 1751: பூலித்தேவன் கும்பினிப்படைத் தலைவர்களான முகமது அலி மற்றும் அப்துல் ரகீம் போன்றவர்களை வரிமறுப்புப் போரில் தோற்கடித்து பாளையக்காரர்கள் போரைத் தோற்றுவித்தல்.
  • 1752: விசயகுமார நாயக்கரை தோற்கடித்துப் பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் பரங்கிப்படை மதுரையை கைப்பற்றல். அதையறிந்த முத்து வடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து கேப்டன் கோப்பின் படைகளை விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராகப் பதவி அமர்த்தல்.
  • 1756: பிரித்தானியாவும் பிரான்சும் முதலாவது கர்நாடக ஒப்பந்தம் செய்தல். கர்நாடக நவாபாக முகம்மது அலி வால்யாவை நியமித்தல்
  • 1759: பிரான்சுப் படை தோமஸ் ஆர்த்தர் தலைமையில் சென்னையைத் தாக்குதல்
  • 1760: பிரித்தானியருக்கும் பிரான்சுக்குமிடையே வந்தவாசிப் போர். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு
  • 1767: மைசூர் சுல்தான் ஐதர் அலி சென்னையைத் தாக்குதல். அதை பிரித்தானியர் முறியடித்தல்.
  • 1773: பிரித்தானிய அரசாங்கம் சீராக்கல் சட்டத்தை அமுலாக்குதல். பிரித்தானிய அரசின் கீழ் சென்னை நிர்வாகம் செல்லுதல்
  • 1777-1832: இரண்டாம் சரபோஜி தஞ்சாவூரை ஆளுதல்
  • 1799: சரபோஜி உடன்படிக்கையின்படி தஞ்சைப் பேரரசு பிரித்தானியர் வசமாதல். பிரித்தானியரால் கட்டபொம்மன் தூக்கிலிடப்படல்
  • 1803: சென்னை ஆளுநரை பென்டிங் நியமித்தல்
  • 1800-1805: பாளையக்காரர் போர்கள்
  • 1806: வேலூர்க் கோட்டையில் ஆளுநர் பென்டிங்க்குவிற்கு எதிராக வேலூரில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய வீரர்களின் வேலூர் சிப்பாய் எழுச்சி


பிரித்தானிய ஆட்சி

  • சு.1800 - தமிழர்கள் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் அழைத்து செல்லப்படல்
  • 1815: பிரித்தானிய அரசால் தேயிலை, கோப்பி, தென்னைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்படல்
  • சு. 1860: பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் தென்னாப்பிரிக்கா அழைத்து செல்லப்படல்
  • 1892: பிரித்தானிய அரசின் இந்திய கவுன்சில்கள் சட்டம் கொண்டுவரப்படல்
  • 1901: தமிழகத்திலிருந்து தமிழர்கள் மலேசியாவிற்கு வேலைக்காகச் செல்லுதல்
  • 1909: இந்திய அரசுச் சட்டம். சென்னை சட்டமியற்றும் கவுன்சிலின் தோற்றம்
  • 1921: முதலாவது பிரதேச தேர்தல் சென்னையில் நடைபெறல்
  • 1927: சென்னை காங்கிரஸ் முழு சுதந்திரத் தீர்வை வெளியிடல்
  • 1928: சைமன் குழுவின் சென்னை வருதல். 
  • 1928: இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்
  • 1937: காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று சென்னையில் ஆட்சியமைத்தல்
  • 1939: இலங்கையில் முதலாவது தமிழ்-சிங்களக் கலவரம் ஏற்படல்
  • 1941: இந்திய முஸ்லிம் லீக் அதன் காங்கிரஸ் கூட்டத்தை சென்னையில் நடத்துதல். முகமது அலி ஜின்னா முக்கிய பேச்சு வழங்கல்
  • 1942-1945: சிங்கப்பூரை ஆக்கிரமித்த ஜப்பானியப் படையினர் இரகசியமாக கிட்டத்தட்ட 150,000 தமிழர்களைக் கொல்லுதல்
  • 1943: நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்திலும் ஜான்சி இராணி படையிலும் தமிழகத்திலிருந்து மலேசியா சென்ற பல இரப்பர் தோட்டத் தொழிலாளிகள் இணைதல்
  • 1944: தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட திராவிடநாடு பிரித்தலை பெரியார் ஈ. வே. இராமசாமி முன்னிறுத்தல் 
  • 1944: பெரியாரும் கா. ந. அண்ணாதுரையும் திராவிடர் கழகத்தை அமைத்தல்
  • 1944: இலங்கையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உருவாக்கம்


பிரித்தானிய ஆட்சிக்கு பிற்பட்ட காலம்

  • 1947: ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகள், கர்நாடகம், தமிழ்நாடு என்பனவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம் உருவாக்கப்படல்
  • 1949: இலங்கைத் தமிழரசுக் கட்சி எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்து உருவாகல்
  • 1953: சென்னை மாநிலம் ஆட்சி மொழியைக் கொண்டிருத்தல்
  • 1958: இலங்கை இனக்கலவரம் ஏற்படல்
  • 1961: மலேசிய கல்விச்சட்டம் தமிழ் மொழியை ஆரம்பப் பாடசாலைகளில் கற்பிக்க அனுமதியளித்தல்
  • 1964: இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பான முதலாவது சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை
  • 1965: இந்தி தேசிய மொழியாக பிரகடனமும், அதற்கெதிரான பரவலான இந்தி எதிர்ப்புப் போராட்டமும்
  • 1969: சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் பெறல்
  • 1981: யாழ் பொது நூலகம் எரிப்பு
  • 1983: இலங்கையில் தமிழர் படுகொலை. இலங்கை இனப்பிரச்சினையும் அது ஆயுதப் போராக மாறுதலும்
  • 1983: அதிகளவான ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயரத் தொடங்குதல்
  • 1985: ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் திம்புப் பேச்சுவார்த்தைகள்
  • 1987: இந்திய இலங்கை ஒப்பந்தம். இந்திய அமைதி காக்கும் படையின் வருகை
  • 2004: ஆழிப்பேரலையால் பல தமிழர் உயிர்களும் உடமைகளும் இழப்பு
  • 2006-2009: இறுதிக்கட்ட ஈழப்போரும் இலங்கைத் தமிழர் இனப்படுகொலையும்
  • 2009: இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைதல். கிட்டத்தட்ட 25 வருடங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கயைின் வட-கிழக்கு பிரதேசங்கள் இலங்கை அரசின் வசமாதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக