பிரம்மக் கமலம் |
இந்தியாவில், உயிர்களை உருவாக்கும் இந்துக் கடவுளான பிம்மாவின் பெயரால் இம்மலர் அழைக்கப்படுகிறது. இம்மலர் மலர்கையில் வேண்டுதல் செய்தால், அவ்வேண்டுதல் கேட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இது சிங்கள மொழியில் சுவர்க்கத்திலிருந்து வந்த மலர் என்ற பொருளில் இலங்கையில் அழைக்கப்படுகிறது. சீனாவில் அதிஷ்டம், எதிர்பாராத ஆதாயம், ஆழ்ந்த மனக்கிளர்ச்சி, குறுகிய மகிமை போன்ற பெயர்களினால் இம்மலர் அழைக்கப்படுகின்றது. ஜப்பானில் உயர்ந்த வரலாறு இம்மலருக்கு உண்டு. அங்கு இதற்கு “நிலாவின் கீழ் அழகு” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. “மாபெரும் வெற்றியின் மலர்” என்ற பொருளில் இந்தோனேசியாவில் அழைக்கப்படுகின்றது.
தண்டு நிமிர்ந்து, படரும் தன்மையுடையதும் ஏராளமான கிளைகளைக் கொண்டும் காணப்படும். முதன்மையான தண்டு உருண்டையான 6 மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியதும், பக்கவாட்டாய் தட்டையாகவும் அடிப்பாகம் மரம் போன்றும் தோற்றமளிக்கும். இணைத் தண்டுகள் தட்டையாக, முட்டை வடிவ நீண்டு கூரான, 30 செ.மீ x 10-12 செ.மீ அளவிற்கு வளரும். தண்டின் ஓரங்கள் உறுதியற்ற ஆழமான விளிம்பும் அலை போன்ற வடிவில் காணப்படும். பூக்கள் தட்டையான பகுதியில் உருவாகின்றன. இது 30 செ.மீ நீளமும் 17 செ.மீ அகலமும் கொண்டு காணப்படும். இது இரவில் மலர்வதுடன் மிகவும் நறுமணம் உடையது. நறுமணத்தின் முதன்மை ஆக்கக்கூறு பென்சீல் சலிசைக்கிளேட் என்ற வேதிப்பொருள் மூலம் கிடைக்கிறது. இதன் விதையுறை மூடப்பெறாத, சற்று கோணமானதாக, பச்சை நிறத்தில் காணப்படும்.
திணை | தாவரம் |
தரப்படுத்தப்படாத | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத | Core eudicots |
வரிசை | Caryophyllales |
குடும்பம் | கள்ளி |
பேரினம் | எபிபைலும் |
இனம் | எ. ஒக்ஸிபெடாலம் |
காப்பு நிலை | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக