![]() |
பகலிலும் இரவிலும் இலங்கை நத்தார் மரம் |
ஆகஸ்ட் 2016 இல் ஆரம்பித்த கட்டுமான வேலைகள் டிசம்பர் முதலாவது வாரத்தில், கத்தோலிக்க கர்தினால் “பண விரயம்” என்றும் “கட்டுமானம் கைவிடப்பட வேண்டும். நத்தார் தேவையுள்ளவர்களுக்காக நிதியை பகிர்ந்து கொள்ளும் விழாவேயன்றி, ஊதாரித்தனமாக பண விரயம் செய்வதல்ல” எனவும் “சந்தைப் பொருளாதாரம் சமயத்தைப் பயன்படுத்தி நத்தாரை விற்பனை செய்யும் கருவி” எனவும் விமர்சித்ததால், கைவிடப்பட்டது.
பின்பு, கொழும்பின் பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித்துடன் இடம் பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து மீளவும் வேலை தொடங்கியது. ஆரம்பத்தில் 330 அடி உயரத்திற்கு அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், இடையில் ஏற்பட்ட தாமதத்தினால் 236 அடிக்கு குறைக்கப்பட்டது. இதன் அருகில் 20 அடி உயரமுள்ள நத்தார் தாத்தா பனிச்சறுக்கு ஊர்தியில் அமர்ந்தவாறு அமைக்கப்பட்டது.
முன்னர் உலகில் மிகவும் உயரமான செயற்கை நத்தார் என அறியப்பட்ட, சீனாவின் குவாங்சௌவில் 184 அடி உயரத்தில், 2015 இல் அமைக்கப்பட்ட நத்தார் மரத்தின் சாதனையை இலங்கை நத்தார் மரம் முறியடித்தது. ஆனாலும், இம்மரம் போதுமான அலங்கரிப்பு, ஊசி இலை ஆகியன இன்றி அமைக்கப்பட்டது என விமர்சனம் செய்யப்பட்டது. குவாங்சௌ நத்தார் மரத்துடன் ஒப்பிடுகையில், இது போதுமான இலைகள் இன்றி, பச்சைப் பசுமை குறைந்து காணப்பட்டது. மேலும், உள்ளகச் சட்டகங்கள் அல்லது அமைப்புத் தெரியுமாறு காணப்பட்டது குறைபாடு. இதன் உருவ அமைப்பு பாரம்பரிய நத்தார் மரம் போன்று இல்லாது, ஏவுகணை வடிவில் அமைக்கப்பட்டது. இது ஜனவரி 2017 இல் பிரிக்கப்பட்டது. டிசம்பர் 2017 இல் கின்னஸ் உலக சாதனைகள் இதனை உலகில் மிகவும் உயரமான செயற்கை நத்தார் மரம் எனப் பதிவு செய்தது.
அறியாத செய்தியை அறிந்தேன். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
நீக்கு