மொழிபெயர்

சிறப்பு அதிரடிப் படை

சிறப்பு அதிரடிப் படை (Special Task Force) அல்லது சுருக்கமாக எஸ்.ரீ.எப் (STF) என்பது இலங்கை காவல் துறையின் சிறப்பான துணை இராணுவப் பிரிவாகும். இது பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சி எதிர்ப்பு ஆகியவற்றில் சிறப்புப் பெற்றது. இது 1983 இல் படைத்துறை அல்லாமல் மிகவும் சிறப்புப்பெற்ற காவல் துறையாக உருவாக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படை
சிறப்பு அதிரடிப் படை

செயற்காலம் 1983 - தற்போது வரை
நாடு இலங்கை
கிளை இலங்கை காவல் துறை
வகை துணை இராணுவப்படை
பொறுப்பு - சிறப்பு நடவடிக்கைப் படை
- உள்நாட்டுப் பாதுகாப்பு
- பயங்கரவாத எதிர்ப்பு
- நெருங்கிய பாதுகாப்பு
- குண்டு தேடி அழித்தல்
- பயணக்கைதி மீட்பு
- சட்ட அமுலாக்கம்
அளவு சுமார் 8000 (2017)
சுருக்கப்பெயர் எஸ்.ரீ.எப் (STF)
குறிக்கோள் வாக்கு வெற்றி நிச்சயம்
நிறம் கடல் பச்சை, பொன் நிறம்
ஆண்டு விழா 1 மார்ச்
சண்டைகள் ஈழப் போர்

செயற்பாடு

சிறப்பு அதிரடிப் படை இலங்கையில் காவல் துறையின் மிக உயர் பயிற்சி பெற்று பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொண்ட பிரிவுகளில் ஒன்றாக விளங்குகிறது. சிறப்பு அதிரடிப் படை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அதிகம் முகாமிட்டிருந்தது. சிறிய அளவிலான பிரிவு மன்னார், வவுனியா மாவட்டங்களில் செயற்பட்டது.

மற்றைய பிரிவுகள் கொழும்பில் பிரமுகர் பாதுகாப்பை வழங்கின. இது சர்வதேச அளவில் இதனுடைய அனுபவத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு சட்ட அமுலாக்க முகவர்களுடன் திட்டமிடலுக்காக உதவிக்காக அழைக்கப்படுவதுண்டு. 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளில் ஏற்படக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்கைளை முகங்கொடுக்க அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உருவாக்கம்

சிறப்பு அதிரடிப் படை 1983 இல் உருவாக்கப்பட்டபோது காவல் துறையினரைக் கொண்டிருந்தது. இதற்கான பயிற்சியை இலங்கை படைத்துறையினரால் வழங்கப்பட்டது. அது படைத்துறை ஆயுதங்களைக் கையாளுதல் கானகச் சண்டை ஆகியவற்றுக்கான அடிப்படைப் பயிற்சியாகவிருந்தது.


இது ஒரு துணை இராணுவமாக இருந்து பின்பு களுத்துறையில் அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படைக்கான பிரத்தியோக பயிற்சியைப் பெற்றது. முதலாவது படையலகுகள் இலங்கையின் வடக்கில் இருந்த காவல் நிலையங்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கவும் விடுதலைப் புலிகளை எதிர்க்கவும் அனுப்பப்பட்டன.

1983 இல் பிரித்தானியாவின் சிறப்பு வான்சேவை (SAS) முன்னாள் அணிகள் வரவழைக்கப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சி எதிர்ப்பு ஆகியவற்றில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு எஸ்.ரீ.எப் இன்  மதிப்பு குறிப்பிட்டளவு உயர்ந்தது. சிறப்பு வான்சேவை நிபுணர்கள் எஸ்.ரீ.எப் படைக்கான எளிமையாக்கப்பட்ட பயிற்சித் தொகுதிகளில், கட்டுக்குருந்தை காலல் துறை கல்லூரியில் பயிற்சியளித்தனர்.

பின்பு, 1988 இல் வான்சேவை நிபுணர்களிடமிருந்து சிறப்பு அதிரடிப் படை நிபுணர்களின் கைக்கு பயிற்சி மாறியது. தற்போது முழுமையான பயிற்சியளிக்கும் பிரிவாக, தென் கிழக்கு ஆசியாவில் சிறப்பான பிரிவுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 1984 இல் இஸ்ரேலின் பாதுகாப்பு முகவர் சின் பெத் இலங்கை ஆயுதப்படைகளுக்கு பயிற்சியளித்தனர். அத்துடன் இஸ்ரேலின் பல அதிகாரிகள் கொழும்பில் இலங்கை படையினருக்கு பயிற்சியளித்தனர்.

நடவடிக்கைகள் 

1987 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் முதல் அம்பாறையில் பொத்துவில் வரையான பகுதிகளை சிறப்பு அதிரடிப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து ஈழப்போரில் பாரியளவில் ஈடுபட்டனர். 15 வெவ்வேறு முகாம்களில் சிறு படைத் தொகுதிகளாக நிறுத்தி வைக்கப்பட்டனர். இந்திய அமைதி காக்கும் படை அமைதி நடவடிக்கைக்காக மட்டக்களப்பிற்கு 1987 இல் வந்தபோது சிறப்பு அதிரடிப் படையினர் மட்டக்களப்பின் வடக்குப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1983 முதல் 1987 வரையான காலகட்டத்தில் சிறப்பு அதிரடிப் படையினரின் ஒரு முகாம்கூட விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.


2002 இல் போர்த்தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின், முதலாவது பாரிய நடுவடிக்கையினை சிறப்பு அதிரடிப் படையினர் “வெற்றி நிச்சயம்” என்ற பெயரில், வரையறுக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில் 4 ஜனவரி 2007 அன்று ஆரம்பித்தனர். இதன் காரணமாக பதினைந்திற்கும் மேற்பட்ட புலிகளின் முகாம்கள் தாக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் புலிகளின் பிரதான முகாமும், பிராந்திய புலனாய்வு மற்றும் விநியோக முகாமான ஸ்டான்லி முகாமும் தாக்குதலுக்குள்ளானது. மேலும், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த வாகையடி முகாம், இலங்கை படைத்துறையினதும் சிறப்பு அதிரடிப் படையினதும் சீருடை அடையாளத்துடன் அமைக்கப்பட்ட யனகன் முகாம், நான்கு வாகனங்களுடன் விநியோகப் பொருட்களைக் கொண்ட ஜீவன் முகாம், விலையுயர்ந்த பொருட்களைக் கொண்ட புலிகளின் தலைவர்கள் சந்திக்கும் டயானா முகாம் ஆகியனவும் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால், பெரியளவிலான ஆயுதங்கள், ஆயுத உபகரணங்கள், குண்டுகள், வெடி பொருட்கள், தொலைத் தொடர்பாடல் கருவிகள், புவியிடங்காட்டி, மின்னியற்றி, படகுகள் போன்ற கைப்பற்றப்பட்டன. இந்நடவடிக்கையில் சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொள்ளப்பட, அவர்கள் பின்வாங்கினர்.

விமர்சனம்

சிறப்பு அதிரடிப் படை சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், ஆட்கள் காணாமல் போதல் உட்பட்ட பலவித மனித உரிமை மீறல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
1997 இல் ஐக்கிய நாடுகள் அவை விசாரணைக்குழுவின்படி, 1988 இற்கும் 1996 இற்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போன 1219 அறிக்கையிடப்பட்ட வழக்குகளில் 5% சிறப்பு அதிரடிப் படையுடன் தொடர்புபட்டது எனக் கண்டறிந்தது.

24 ஆகஸ்ட் – 5 செப்டம்பர் 1997 இல் இலங்கை சென்ற ஐ.நா சிறப்பு அறிக்கையிடல் அதிகாரி “கொழும்பில் சிறப்பு அதிரடிப் படையின் தடுப்புக்காவலில் இருந்தபோது” ஆட்கள் மரணமடைந்ததாக குற்றஞ்சாட்டினார்.

குறைந்தது இரண்டு சட்டத்துக்குப் புறம்பான கொலைகளில் சிறப்பு அதிரடிப் படை உறுப்பினர்கள் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் அல்லது வெளியாளர்களால் குறிப்பிடப்பட்டது. ஏப்ரல் 1994 இல் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் மீளவும் ஆரம்பித்த சண்டையைத் தொடர்ந்து, 21 இற்கும் 31 இற்கும் இடைப்பட்ட தமிழ் ஆண்களின் சிதைக்கப்பட்ட உடல்கள் கொழும்பிற்கு அண்மையிலுள்ள ஆறுகளிலும் ஏரிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டன.

10 சிறப்பு அதிரடிப் படையினர் (மற்றைய 15 பேர்) கொழும்பு சிறப்பு அதிரடிப் படைத் தலைமையகத்தில் வைத்து கொலை செய்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்டனர். அத்துடன், குறைந்தது 17 சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் அதிரடிப் படையினர் உட்பட்ட இலங்கைப் படையினரால் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பதிலாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மனித உரிமை கண்காணிப்பாளர்கள் “மக்கள்” இறந்ததாக உறுதிசெய்ய பாதுகாப்புப் படையினர் அவர்கள் புலிகள் எனத் தெரிவித்தனர்.

சிறப்பு அதிரடிப் படை பயன்படுத்தும் இராணுவத் தளபாடங்கள்

வாகனங்கள்
  • யுனிவபல் - கண்ணிவெடிப் பாதுகாப்பு கவச வாகனம்
  • லாண்ட் ரோவர் டிபென்டர்
  • யுனிகோன் துருப்புக் காவி
  • பின்டட் கொமோடோ துருப்புக் காவி

சிறு பீரங்கி
  • வகை 84 - 82 மிமி சிறு பீரங்கி
  • வகை 89 - 60 மிமி சிறு பீரங்கி

கைத்துப்பாக்கிகள்
  • குளோக்
  • பெரட்டா 92
  • ஸ்மித் அண்ட் வெசன் எம் அண்ட் பி
  • எம்1911 கைத்துப்பாக்கி
  • பிரவுனிங் ஹை பவர் 

தாக்கதல் துப்பாக்கிகள்
  • வகை 56 தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி  
  • எம்4 சிறு துப்பாக்கி
  • கியூ.பி.இசட் - 95

துணை இயந்திரத் துப்பாக்கி
  • கெக்லர் அண்ட் கோக் எம்பி5 துணை இயந்திரத் துப்பாக்கி
  • ஊசி துணை இயந்திரத் துப்பாக்கி

குறிசுடு துப்பாக்கி 
  • கெக்லர் அண்ட் கோக் பி.எஸ்.ஜி1

எறிகுண்டு செலுத்தி
  • எம்203 எறிகுண்டு செலுத்தி

ஏறிகணைச் செலுத்தி
  • வகை 69 ஆர்.பி.ஜி

ஏவுகணைச் செலுத்தி 
  • எஸ். ஏ-18 ஏவுகணைச் செலுத்தி 

இயந்திரத் துப்பாக்கி
  • அல்டிமக்ஸ் 100 இலகு இயந்திரத் துப்பாக்கி

வழுக்கைப் புல்

வழுக்கைப் புல் என்பது கொமேலினாசியே (Commelinaceae) குடும்ப ஆண்டுத் தாவர இனமாகும். இதன் தாவரவியல் பெயர் சையனோடிஸ் அக்சிலாரிஸ் (Cyanotis axillaris) என்பதாகும். படர்ந்து வளரும் இத்தாவரம் இந்தியா, இலங்கை உட்பட்ட இந்திய துணைக்கண்டம், தென் சீனா, வட அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைத் தாயகமாக் கொண்டது. இது மழைக்காலக் காடு, கானகம், செறிவான புல்நிலம் ஆகிய இடங்களில் வளருகின்றது. இது மூலிகைத் தாவரமாக இந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பன்றிகளுக்கு உணவாக சில இடங்களில் கொடுக்கப்படுகிறது. இது ஒரு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1) ஆகும்.

வழுக்கைப் புல்
வழுக்கைப் புல்

திணை தாவரம்
உயிரினக் கிளை பூக்கும் தாவரம்
உயிரினக் கிளை ஒருவித்திலை
உயிரினக் கிளை கொமேலினிட்ஸ்
வகுப்பு கொமேலினேல்ஸ்
குடும்பம் கொமேலினேசியா
பேரினம் சையனோடிஸ்
இனம் சை. அக்சிலாரிஸ்


வழுக்கைப் புல் சதைப்பற்றுள்ள ஒரு பூண்டாகும். இது 15-45 செ.மீ உயரமாக வளரக்கூடியதாகவும். நீளமாக, ஒடுக்கமான, வரி போன்ற ஈட்டி அமைப்பை ஒத்த இலைகள் 5-15 செ.மீ வரை வளரக்கூடியது. இதன் ஊதா நிறப்பூக்கள் 5-6 மி.மீ குறுக்களவில் இலையின் உறை அமைப்பில் சாய்வாக வெளிப்பட்டுக் காணப்படும். இதன் பூவிதழ் அகலமாக முட்டை வடிவிலும் இழைகள் நீண்டு நீள நிற உரோமம் போன்ற அமைந்து மயிர்கள் போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. இப்பூண்டு பொதுவான ஒரு களையாக பயிர்ச்செய்கை நிலங்களில் காணப்படுகின்றது. இதன் பூக்கும் காலம் ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையாகும்.

தமிழ்த்தாய்

தமிழ்த்தாய் அல்லது தமிழன்னை (mother of the Tamil language; Tamil Thaai) என்பது தமிழ் மொழிக்கான தாய் உருவமாக தெய்வமாக்கட்ட ஒன்றாகும். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரைவாசியின் பிற்பகுதியில் தமிழ் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் தமிழ் மொழியின் வேண்டப்பட்ட உருவமாக உருவாக்கப்பட்டது. தமிழ்த்தாயினை வாழ்த்தி மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையால் (1855 – 1897) எழுதப்பட்டு 1891 இல் வெளியிடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து தமிழ்த்தாய் எனும் பதம் தமிழ் பேசும் உலகில் முக்கியத்துவம் பெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து எம். எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டதிலிருந்து தமிழ்நாடு அரசாங்கத்தின் மாநிலப் பாடலாக உள்வாங்கப்பட்டது.

தமிழ்த்தாய்
தமிழ்த்தாய் அல்லது தமிழன்னை

தமிழ்த்தாய் கோயில்

தமிழ் மொழியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தாய் தெய்வத்திற்கான கோயில் தமிழ்த்தாய் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் அமைந்துள்ளது. இது தமிழுக்காக கடவுளுக்காக உலகில் அமைக்கப்பட்டுள்ள ஒரே கோயிலாகும். இக்கோயில் கம்பன் மணி மண்டப வளாகத்தின்  அமைந்துள்ளது. இது அமைந்துள்ள தெரு தமிழ்த்தாய் கோயில் வீதி என அழைக்கப்படுகின்றது.

தமிழ்த்தாய்க்குக் கோயில் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை கம்பன் கழக நிறுவனர் கம்பன் ஆடிப்போடி சா. கணேசனின் கொண்டிருந்தார்.  23 ஏப்ரல் 1975 அன்று கோயிலுக்குகான கால்கோள் விழா நடைபெற்றது. தமிழக அரசு ஐந்து இலட்சம் ரூபாய் நிதியின ஒதுக்கியது. சா. கணேசன், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் வை. கணபதி ஸ்தபதி என்போரால் தமிழ்த்தாய் சிலைக்கு வடிவம் கொடுத்தனர். இறுதிக் கட்ட வேலைகளுக்காக மீண்டும் தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. இதனை அன்றைய தமிழக அரசின் முதல்வர் மு. கருணாநிதி 16 ஏப்ரல் 1993 இல் திறந்து வைத்தார். , கம்பன் அறநிலை இக்கோயிலை நிர்வாகம் செய்கிறது.

அமைப்பு

தமிழ்த்தாய்க் கோயில் கம்பன் மணி மண்டபத்தின் வலப்புறத்தில் வடக்குப் பக்கம் நோக்கியவாறு மும்முனை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆறு பட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் பரிவார தெய்வங்களாக, வடக்கில் வள்ளுவர், தென்கில் இளங்கோவடிகள், வடமேற்கில் கம்பர் என்போர் தனி விமானங்களுடன் அமைக்கப்பட்டுள்ளனர். நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக அமைக்கப்பட்டுள்ளனர்.

வழிபாட்டு முறைகள்

இக்கோயிலிலுள்ள தமிழ்த்தாய்ச் சிலை மற்றைய கோயில்களில் உள்ள சிலையைப் போன்று வழிபடுவதில்லை. ஒவ்வொரு வருடமும் ஏப்ரலில் கப்பன் விழாவின்போது இக்கோயில் திறப்படுகின்றது. மற்றக் காலங்களில் இது பூட்டப்பட்டிருக்கும். ஆயினும், இவ்விதியில் மாற்றங்களும் உள்ளன.

மலர், மாலை, நறும்புகை ஆகியவை முற்றத்தில் படைக்கப்படும். திருநீராட்டுச் செய்யும்போது உலோகம், மரம், மண்கலன்கள் ஆகியவை பயன்படுத்தக்கூடாது எனினும் விதிவிலக்கும் உள்ளது. தமிழ்த்தாய் உள்ளிட்ட சிலைகளுக்கு ஆடை, அணி, மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் தமிழ்த்தாய்க்கு ஆடை அணிவிக்கும் முறையும் உள்ளது. மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் படைக்கப்படும். பொது வழிபாட்டின்போது தேங்காய், பழம், மலர் ஆகியவற்றுடனான படையல் மூத்த ஒருவருக்கு வழங்கப்படும். அதன்பின் எல்லோருக்கும் சந்தனம், மலர், சர்க்கரை ஆகியவற்றுடன் பிரசாதம் வழங்கப்பெறும்.

தமிழ்த்தாய்ச் சிலை

தமிழ்த்தாய்ச் சிலை நான்கு கைகளுடன், வலக்கால் கீழே தொங்கியவாறும், இடக்கால் மடித்த நிலையிலும், தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு உள்ளது. வலப்புற பின் கையில் சுடரும், பின்புற இடக்கையில் செங்கேட்டு யாழும் உள்ளன. வலப்புற கீழுள்ள கையில் உருத்திராட்ச மாலையும், இடப்புற கீழுள்ள கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. கால்களில் சிலம்பும் தண்டையும் அணியப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் என்பன சிலையின் பின்புறத்தை அலங்காரம் செய்யும் திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியர் சிலையும், இடப்புறம் தொல்காப்பியர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.

வேறு வடிவங்கள்

ஆயினும் ஊடகங்களில் பல்வேறு வடிவமைப்பில் தமிழ்த்தாய் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பஞ்சலோகச் சிலை வடிவமைப்பு தமிழ்த்தாய் உலகின் மீது அமர்ந்திருப்பது போன்று, உலகம் முழுவதும் தமிழ் பரவுதல் என்ற கருத்தில் 1940 இல் கணேசனால் உருவாக்கப்பட்டது. ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டுக்காக 1981 இல் மதுரையில் அமைக்கப்பட்ட சிலை தாமரையில் அபாய முத்திரையுடன் அமர்ந்திருப்பது போன்றும் உருவாக்கப்பட்டது. சில இடங்களில், தமிழ் இலக்கியத்திற்கு செய்த பணிக்காக ஆண்டாள் தமிழ்த்தாய் என கருதப்படுகிறாள். மதுரையில் நிற்கும் நிலையில் தமிழ்த்தாய்ச் சிலை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது.

மதுரையில் தமிழ்த்தாய்ச் சிலை

1981 இல், அன்றைய தமிழக அரசின் முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஜனவரி 1981 இல் ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டுக்காக தமிழ்த்தாயின் சிலை மதுரையில் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.

14 மே 2013 இல் அப்போதைய தமிழக அரசின் முதல்வர் ஜெ. ஜெயலலிதா 100 கோடி ரூபா செலவில் மதுரையில் 300 அடி உயர தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என அறிவித்தார். அது நியூயோர்க்கில் அமைந்துள்ள அமெரிக்க சுதந்திர சிலையின் உயரத்திற்கு ஒப்பாகும் என அறிவித்தார். ஆயினும், அச்சிலை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்திட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட உருவம் சில விமர்சனங்களைப் பெற்றது.

மலேசியத் தமிழ்

மலேசியத் தமிழ் அல்லது மலேசியத் தமிழ் மொழி (Malaysian Tamil) என்பது மலேசியாவில் பேசப்படும் தமிழ் மொழியின் உள்ளூர் வழக்காகும். இது சிங்கப்பூரிலும் பேசப்படுகின்றது. இது மலேசியக் கல்வியில் பயன்படுத்தப்படும் மொழிகளில் ஒன்றும் ஆகும் (அங்கு ஆங்கிலம், மலாய், மன்டரின் என்பன கல்விச் செயற்பாட்டில் பயன்பாட்டில் உள்ளன). இந்தியத் தமிழுக்கும் மலேசியத் தமிழுக்கும் இடையிலான சொற்றொகுதியில் பல வேறுபாடுகள் உள்ளன.
மலேசியத் தமிழ்
மலேசியத் தமிழ்

ஆரம்ப கால வாணிப நடவடிக்கையின்போது, தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ளுமாறு பொதுவான மொழி ஒன்று தேவையாகவிருந்தது. வரலாற்றாசிரியர்களான ஜே. வி. செபஸ்ரியன், கே. ரி. திருநாவுக்கரசு, ஏ. டபிள்யு. ஹமில்டன் போன்றோர் வரலாற்றுக் காலத்தில் மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் வாணிபத்திற்கான பொது மொழியாக தமிழ் காணப்பட்டது எனப் பதிவு செய்துள்ளனர். கடல்சார் தமிழ் குறிப்பிடத்தக்கமை சுமத்திரா, மலாய் தீபகற்ப வர்த்தகத்தில் நூற்றாண்டாக தொடர்ந்து, வாணிபச் செயற்பாடுகளினால் 15 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையாக காலத்தில் தமிழ்ச் சொற்கள் மலாயினுள் உள்வாங்கப்படுதல் அதிகரித்தது. 17 ஆம் நூற்றாண்டில், கிழக்கிந்தியக் கம்பனி தன்னுடைய கடிதப் போக்குவரத்தில் தமிழை கட்டாயமாக உள்வாங்கியது. மலாக்காவிலும் ஏனைய பிற துறைமுகங்களிலும், 19 ஆம் நூற்றாண்டு வரை, வரவு செலவு கணக்கு முறையிலும் கணக்கியலிலும் மலாய் சொற்றொகுதியுடன் தமிழ் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.


நாளாந்தப் பாவனையிலுள்ள சொற்கள் சில தமிழிலிருந்து மலாய்க்கு கடன் (தமிழிலுள்ள வடமொழிச் சொற்களும் இதனுள் அடக்கம்) வாங்கப்பட்டுள்ளன. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
தமிழ் மலாய்
கடை கெடை
கப்பல் கபல்
வகை பகய்
நகரம் நகர
பூமி புமி
சுவர்க்கம் சுவர்க்க
அநியாயம் அநியாய
ரகசியம் ரகஷ்ய
வர்ணம் வர்ண

மலேசியத் தமிழுக்கான சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன மொழிக் குறியீட்டின் மூன்றாம் பகுதிக் குறியீடு (ISO 639-3) mala1467 என்பதாகும். 2006- 2010 கணக்கெடுப்பின்படி மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் 3.9 மில்லியன் பேர் மலேசியத் தமிழைப் பேசுகின்றனர்.

பத்மராகம்

பத்மராகம் என்பது ஓர் இரத்தினக்கல் வகையாகும். இக்கல் கொரண்டம் (Corundum) குடும்பத்தைச் சேர்ந்த, மென்சிவப்பு- செம்மஞ்சள் சபையர் (sapphire) இரத்தினக்கல் ஆகும். இது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் தற்போது மடகஸ்கார், தன்சானியா ஆகிய இடங்களிலும், சிறிதளவில் வியட்நாம், கிழக்கு ஆபிரிக்கா ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது. தன்சானியா பகுதியில் கிடைக்கும் பழுப்பு-செம்மஞ்சள் கல்லானது பத்மராகம் என அறியப்பட்டாலும், அது பழுப்பு-செம்மஞ்சள் சபையர் என அறியப்படுகின்றது. இது அரியாதாகக் கிடைப்பதால் இதன் விலையும் அதிகமாகும்.

பத்மராகம்
பத்மராகம்

இதில் மென்சிவப்பு-செம்மஞ்சள் மற்றும் செம்மஞ்சள்-மென்சிவப்பு நிற மாற்றத்தில் கற்கள் காணப்படுகின்றன. இதை ஒத்த வேறு சில கற்கள் காணப்படுகின்றன. அவற்றில், மென்சிவப்பில் மிகவும் குறைவான செம்மஞ்சள், ஊதா கலந்த மென்சிவப்பு, மென்சிவப்பபைவிட சற்று அதிகமாக செம்மஞ்சள் ஆகிய கற்களும் காணப்படுகின்றன. ஆனால் அவை பத்மராகம் என வகைப்படுத்தப்படுவதில்லை. 50:50 வீத மென்சிவப்பு-செம்மஞ்சள் நிறமுடைய கல்லே சரியான பத்மராகம் என அறியப்படுகின்றது. இது வெப்பமண்டல வானில் சூரிய மறைவு நேரம் ஏற்படும் அழகிய நிறத்தை ஒத்துக் காணப்படும். 30% செம்மஞ்சள் + 70% மென்சிவப்பு அல்லது 70% செம்மஞ்சள் + 30% மென்சிவப்பு ஆகிய நிற அளவிலும் காணப்படலாம். மென்சிவப்பு நிறம் அதிகமுள்ள கற்களை ஜப்பானியர்களும், செம்மஞ்சள் நிறம் அதிகமுள்ள கற்களை ஐரோப்பியர்களும் விரும்புகின்றனர்.

சமஸ்கிருதத்தில் “பத்ம” (Padma) என்பது தாமரையையும், “ராக” (raga) என்பது நிறத்தையும் குறிப்பதில் இருந்து இதன் பெயர் (பத்ம+ராகம் / Padma+raga) பெறப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது. அதாவது தாமரை மலரின் நிறம் உடையது என்ற பொருளை உடையது. இன்னுமொரு கருத்தின்படி, தாமரை மலர்தல் என்ற சிங்களச் சொல்லில் இருந்து இதன் பெயர் பெறப்பட்டு, சமஸ்கிருதத்திற்கு மருவியது என்ற கருத்தும் காணப்படுகின்றது. மேலும், ஜெர்மானியர்கள் இதன் சரியான உச்சரிப்பை Padparadscha என்று பிழையாக உச்சரிக்க அதுவும் ஒரு பெயராகியதாகக் கருதப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் Padmaraga, Pathmaraja, Padmaradscha எனும் பெயர்களால் அறியப்படுகிறது. ஆயினும் இது தமிழில் ஒரு பெயரால் மாத்திரம் அறியப்படுகின்றது.

இது ஒரு மென்சிவப்பு-செம்மஞ்சள் சபையர் இரத்தினமாக இருப்பினும், சிலர் இதனை மாணிக்கக்கல்லின் ஒரு வகை என தவறாகப் புரிந்து கொள்கின்றனர். மாணிக்கக்கல்லும் கொரண்டம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லாகும். கொரண்டம் குடும்பத்தைச் சேர்ந்த கற்கள் பின்வருமாறு:

  • மாணிக்கம்
  • நீலக்கல்
  • மென்சிவப்பு சபையர்
  • மஞ்சள் சபையர் 
  • செம்மஞ்சள்
  • பத்மராகம் 
  • ஊதா சபையர்
  • பச்சை சபையர்
  • வெள்ளை சபையர்
  • நட்சத்திர சபையர்
  • நிறம் மாறும் சபையர்

குறிப்பு: பத்மராகம் என்ற சொல் இசை இராகங்களில் ஒன்றைக் குறிக்கவும் பயன்படுகின்றது.